மறையவே மறையாதுனு நெனச்ச கரும்புள்ளிகள் ஒரே இரவில் மறைய வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Dark Spot Removal Home Remedy

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் பருக்கள் அதிகமாக வருகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முகத்தில் பருக்கள் இல்லையென்றாலும், பெண்கள் முக அழகை மேம்படுத்துவதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் பாதிப்பு இல்லாத சருமத்தில் கூட பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை 1 நாள் இரவில் எப்படி மறைய வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சந்தனம் எடுத்து கொள்ளவும்:

சந்தனம் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு சந்தனம் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

 இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். பொதுவாக சந்தனத்தில் கரும்புள்ளைகளை மறைய செய்யும் பண்புகள் இருக்கின்றன. மேலும் இது சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.  
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Dark Spot Removal Home Remedy in Tamil: 

Dark Spot Removal Home

  1. ஓட்ஸ் பவுடர் – 2 ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்
  3. பால் – 2 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பவுடர் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தேன் 1 ஸ்பூன் மற்றும் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

 

பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்து பின் கழுவி கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

 ஓட்ஸ் பவுடர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முகத்தில் பருக்கள் வராமல் தடுத்து கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை மறைய செய்கிறது. தேன் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும் கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. இதுபோல நீங்களும் ட்ரை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்..! 

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil