வடபழனி முருகன் கோவில் நேரம்
ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அது போல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூஜை நடக்கும். இந்த பூஜை ஆனது எல்லா நேரத்திலும் செய்ய மாட்டார்கள். அதற்கு என்று உகந்த நேரம் இருக்கும். அப்போது தான் அந்த பூஜையை செய்வார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு அலங்காரங்கள், நேரங்கள் என்று இருக்கும். அந்த நேரத்தில் தான் அலங்காரங்களை செய்வார்கள்.
முருக கடவுளை பலருக்கும் பிடித்தமான கடவுளாக இருக்கிறார்கள். இந்த கடவுளுக்கு சஷ்டி அன்று விரதம் இருப்பார்கள். முருகன் பல இடத்தில் இருக்கிறார். சுவாமிமலை, பழனி, வடபழனி என்ற இடத்தில் இருக்கிறார். இந்த பதிவில் வடபழனி முருகன் கோவில் நடை திறக்கும் நேரம் மற்றும் பூஜை நேரம் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..
வடபழனி முருகன் கோவில் வரலாறு:
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோயில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த கோயிலானது அண்ணாசாமி என்ற நாயக்கர் எனும் முருகன் பக்தர் தன்னுடைய சொந்த வழிபாட்டிற்காக ஒரு கொட்டகையை அமைத்தார். இவர் ஒரு நாள் கடுமையான வயிற்று வழியில் இருந்தார். அப்போது அவருடைய பிரச்சனை தீர வேண்டும் என்று திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இதனால் அவருடைய வயிற்று வலி சரியானது. முருகனின் சக்தியை உணர ஆரம்பித்தார். நாளடைவில் பலருக்கும் அருள்வாக்கு கூறினார். 1920 ஆம் ஆண்டில் கோபுரம் அல்லது ராஜகோபுரம் மற்றும் உள்வட்டச் சாலை கட்டப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது.
பழனி முருகனுக்கு செய்யும் அலங்காரம் மற்றும் அதனுடைய நேரம் தெரியுமா.?
வடபழனி முருகன் கோவில் தரிசன நேரம்:
- காலை நேரம் தரிசனம்: காலை 6 AMமணி முதல் மதியம் 12.30 PM மணி வரை
- மாலை நேரம் தரிசனம்: மாலை 4 PM மணி முதல் 8PM மணி வரை
மகா கந்த சஷ்டி, கிருத்திகை மாதம், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற நாட்களில், நடை எப்போதும் திறந்தே இருக்கும். செவ்வாய் கிழமைகளில் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
வடபழனி முருகன் கோவில் பூஜை நேரம்:
நாட்கள் | பூஜைகள் | நேரம் |
திங்கள் முதல் ஞாயிறு வரை | Palliyarai Pooja | 05:30 AM |
திங்கள் முதல் ஞாயிறு வரை | கால சாந்தி பூஜை | 06:30 AM |
திங்கள் முதல் ஞாயிறு வரை | உச்சி கால பூஜை | 12:00 PM |
திங்கள் முதல் ஞாயிறு வரை | சாயரக்ஷா பூஜை | 07:00 PM |
திங்கள் முதல் ஞாயிறு வரை | அர்த்தஜாம பூஜை | 09:00 PM |
அர்த்த சாம பூஜை ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
வடபழனி முருகன் கோவில் பூஜை நேரங்கள் விசேஷ நாட்களில் மாறுபடலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |