வீட்டில் கஷ்டம் தீர என்ன செய்வது
வீட்டிற்கு வீடு வாசல்படி இருப்பது போல எல்லாரும் வீட்டிலும் கஷ்டம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கஷ்டம் இருக்கிறது, சில நபருக்கு பண கஷ்டம், சிலருக்கு திருமணம் ஆகவில்லை என்ற கஷ்டம், சில நபருக்கு உடலை ஆரோக்கியமாக இல்லை என்று கவலைப்படுவார்கள். இது போல் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கிறது. கஷ்டங்களை நினைத்து புலம்பி கொண்டே இருப்பார்கள். சில பேர் அதற்கான தீர்வை காண வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி தீர்வை காண்பதற்காக காசு கொடுத்து பரிகாரத்தை செய்வார்கள். இந்த பதிவில் வீட்டில் எந்த கஷ்டமும் இல்லாமல் இருப்பதற்கு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
விநாயகர் பரிகாரம்:
பொதுவாக இந்துக்கள் எந்த வேலையை தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டு தான் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அந்த செயலானது எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடுவார்கள்.
இந்த பரிகாரம் செய்வதற்கு 15 தேங்காய் மட்டும் தான் தேவைப்படும்.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
15 தேங்காய்களை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து விடவும், முதல் நாளான திங்கட்கிழமை 1 தேங்காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். இந்த சுற்றிய தேங்காயை விநாயகர் கோவிலுக்கு எடுத்து சென்று பூஜை செய்து வாசலில் சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும்.
கஷ்டங்கள் அனைத்தும் தீர… இரவு தூங்கும்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
அடுத்த நாள் செவ்வாய் கிழமை 2 தேங்காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி விட்டு விநாயகர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து 2 தேங்காய்களையும் வாசலில் சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும்.
மூன்றாவது நாள் புதன் கிழமை, 3 தேங்காய், நான்காவது நாள் வியாழக்கிழமை 4 தேங்காய், வெள்ளிக்கிழமை 5 தேங்காய் என்ற கணக்கில் மேல் கூறப்பட்டுள்ளது போல் பரிகாரம் செய்ய வேண்டும்.
கடைசி நாள் அருகம் புல்லை மாலையாக கட்டி விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை ஒரு முறை மட்டும் செய்து பாருங்க உங்க வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் நீங்கி விடும். அதுமட்டுமில்லாமல் பரிகாரத்தை மட்டும் செய்து விட்டு எனக்கு எந்த கஷ்டமும் நீங்கவில்லை என்று சொல்ல கூடாது, உங்களின் கஷ்டத்தை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்.. தீராத கடனும் தீர்ந்து விடும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |