Uppu Pariharam
பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டயமாக வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. என்ன தான் நாம் தினமும் வேலைக்கு சென்றாலும் கூட சில நேரத்தில் நம்முடைய தேவை ஆனது அதிகரிக்க தான் செய்கிறது. இவ்வாறு தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக நாம் கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. கடன் வாங்குவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அத்தகைய கடனை சரியான நேரத்தில் அடைப்பது என்பது மிகவும் முக்கியம். கடன் வாங்கும் எல்லோரும் சரியான நேரத்தில் வாங்கிய கடனை அடைப்பது இல்லை. ஒரு சிலருக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து விடுகிறது. மற்ற சிலருக்கு கடனை அடைக்க முடியாமல் வெறும் முயற்சியோடு போய்விடுகிறது. அதனால் தான் இன்றைய கடனை அடைப்பதற்காக கல் உப்பு பரிகாரம் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பணக்காரனைக் கீழ் தள்ளும் இந்த காரியத்தை செய்யாதீர்கள் |
கல் உப்பு பரிகாரம்:
அனைவருடைய வீட்டிலும் சமையலுக்கு உப்பு பயன்படுத்துவது பொதுவான ஒன்று. அந்த வகையில் பார்த்தோம் என்றால் உப்பில்லா சாப்பாடு குப்பையிலேயே என்று கூறுவார்கள். ஏனென்றால் சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் அந்த சாப்பாட்டினை யாராலும் சாப்பிட முடியாது.
இத்தகைய கல் உப்பு ஆனது ஆன்மீகத்தில் மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்று கூறப்படுவதால் வீட்டில் இருக்கும் தீராத கடனையும் இது தீர்க்குமாம். கூறப்படுகிறது. இப்படிப்பட்ட கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- கல் உப்பு- 1 பாக்கெட்
- வசம்பு- 1
- விரலி மஞ்சள்- 1
- கண்ணாடி அல்லது பீங்கான் பாட்டில்
பரிகாரம் செய்முறை:
முதலில் ஒரு மூடி போட்ட கண்ணாடி பாட்டிலினை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பாட்டிலின் அடியில் கல் உப்பினை சிறிதளவு சேர்த்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு பாட்டிலில் உள்ள கல் உப்பின் மேலே விரலி மஞ்சளினை வைத்து கொண்டு பின்பு அதன் அருகிலே வசம்பினையும் வைத்து விடுங்கள். கடைசியாக அதன் மேலே கல் உப்பினை பாட்டில் நிரம்பும்படி வைத்து கொள்ளுங்கள்.
இப்போது அந்த கண்ணாடி பாட்டிலினை மூடி போட்டு மூடிவிடுங்கள். தயார் செய்து வைத்துள்ள உப்பு தாந்தீரிகத்தை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயோ அல்லது சமையல் அறையிலோ யாரு கண்களுக்கும் தெரியாதவாறு வைத்து விட்டு பின்பு விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
இந்த உப்பு தாந்தீரிகத்தை 48 நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள். 48 நாட்கள் கழித்த பிறகு அந்த உப்பினை தண்ணீரில் கரைத்து விடுங்கள்.
மிளகுடன் இந்த பொருளை சேர்த்து வீட்டில் வைய்யுங்கள் கோடி கடனும் எளிதில் அடையும் |
பரிகாரம் செய்ய உகந்த நாள்:
இந்த கல் உப்பு பரிகாரத்தை செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது வெள்ளிக்கிழமை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி அனைத்தும் நீங்கி வீட்டில் இருக்கும் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து பண வரவு உண்டாகும்.
மேலும் இந்த பரிகாரத்தை செய்வதோடு மட்டும் இல்லாமல் கடனை அடைப்பதற்கான முயற்சியினை விடாமல் செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |