வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

16 செல்வம் என்றால் என்ன? | அவை என்னென்ன?

Updated On: November 11, 2025 6:40 PM
Follow Us:
16 Selvangal
---Advertisement---
Advertisement

16 செல்வம் என்றால் என்ன? | பதினாறு செல்வங்கள் அபிராமி அந்தாதி

பதினாறு பெற்று பெரும்வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது தமிழர்களின் மரபாகும். குறிப்பாக இதனை திருமணம் ஆன மணமக்களை, பெரியவர்கள் இவ்வாறு வாழ்த்துவார்கள். இவ்வாறு பெரியவர்கள் வாழ்த்தும் போது மணமக்கள் இதற்கு அர்த்தம் ஒன்றும் புரியாமல் சிரித்து கொண்டு குழப்பத்தில் நின்று கொண்டிருப்பார்கள். அபிராமி அந்தாதி பதிகம் பாடலொன்றில் மிக அழகாக இந்த 16 செல்வங்கள் என்னென்ன என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது.

16 செல்வங்கள் என்பது வேறு ஒன்று இல்லை கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகியவற்றைத்தான் 16 செல்வங்கள் என்று கூறுகின்றன.. அதன் விளக்கம் பற்றி கீழே படித்தறியலாம் வாங்க..

பதினாறு செல்வங்கள் யாவை – 16 Selvangal List in Tamil:-

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..! | Makkal Osai - மக்கள் ஓசை

16 செல்வங்கள் படம்

16 வகையான செல்வங்கள்
01 நோயில்லாத உடல்
02 சிறப்பான கல்வி
03 குறைவில்லாத தானியம்
04 தீமை இன்றி பெறும் செல்வம்
05 அற்புதமான அழகு
06 அழியாத புகழ்
07 என்றும் இளமை
08 நுட்பமான அறிவு
09 குழந்தைச் செல்வம்
10 வலிமையான உடல்
11 நீண்ட ஆயுள்
12 எடுத்தக் காரியத்தில் வெற்றி
13 சிறப்பு மிக்க பெருமை
14 நல்ல விதி
15 துணிவு
16 சிறப்பான அனுபவம்

16 செல்வங்கள் அபிராமி அந்தாதி | 16 செல்வங்கள் பாடல்

கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

ஒருவன் புகழை அடைகிறார் என்றால் கல்வி செல்வத்தில் குறைந்தவராக இருப்பார். அதுவே நல்லா மக்களை பெற்றால் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாமல் இருப்பார். பெருமை கிடைத்தால் ஆயுள் குறையும். ஆயுள் இருந்தால் பொருள் இருக்காது. இப்படி ஏதாவது ஒரு குறை இருந்தால் நீங்கள் பிறவாமை என்னும் வரத்தை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி இருக்கும். இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்த பிறகே நீங்கள் மீண்டும் மண்ணுலகில் வராமல் இருப்பீர்கள்.

மனிதனாக பிறந்த அனைவருமே இந்த 16 செல்வத்தை அடைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம். இந்த 16 செல்வத்தையும் ஒருவர் அடைந்து விட்டால் அவர் வாழ்க்கையில் முழுமை பெறுகிறார். இல்லையென்றால் மறுபிறவி எடுத்து கொண்டே இருப்பார். இதை தான் கர்மா என்று அழைக்கிறோம்.

ஒருவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப 16 செல்வங்களை அடைகிறார்கள். எவன் ஒருவன் 16 செல்வத்தை அடைகிறானோ அவனே மீண்டும் பிறவாமை என்ற வரத்தை அடைகிறார்கள்.

அபிராமி அந்தாதி 16 செல்வங்கள் | 16 வகை பேறுகள்

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி போன்றவை ஆகும்.

செல்வம் என்றால் என்ன.?

செல்வம் என்றால் பணம், ஐசுவரியம், சொத்து என்று பொருள்படுகிறது. இந்த மூன்றும் அதிகமாக உள்ளவரை தான் செல்வந்தர் என்று கூறுகிறோம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now