பிரியாணி சாப்பிடுபவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

பிரியாணி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்றால் ஒரு அதிர்ச்சியான தகவல் தான்..! என்னவென்று யோசிப்பீர்கள் நாம் அனைவருக்குமே பிரியாணி என்பது பிடித்தமான ஒன்றாக உள்ளது அப்படியிருக்கும்பட்சத்தில் அதனை பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் தான். அது என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து பாருங்கள்..!

Eating Biryani Often is Good or Bad in Tamil: 

பொதுவாக ஒரு சிலருக்கு மிகவும் பிடித்த உணவாக திகழ்வது பிரியாணி தான். அவர்களுக்கு எந்த அளவுக்கு பிரியாணி பிடிக்கும் என்றால் காலை முதல் இரவு வரை பிரியாணி ஒரு வேளையாவது மட்டுமாவது சாப்பிட வேண்டும் என்ற அளவுக்கு பிடிக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு இதை ஏன் முன்னோர்கள் சொல்கிறார்கள் என்றால் ஒரு உணவு பிடிக்கும் என்றால்  அதனை அதிகமாக சாப்பிட்டாலும் அது கெடுதலாக இருக்கும் என்பதற்காகத்தான். அவ்வாறு அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

உடல் எடை அதிகம்:

உடல் எடை அதிகம்

அதிகளவு பிரியாணி உட்கொள்வதால் உடலுக்கு 30 முதல் 35 சதவீதம் வரை கொலஸ்டரால் ஏற்படுகிறது, அதாவது அடிவயிற்று வலி, மார்பக வலி, வயிற்றில் அலர்ஜி, நெஞ்சு எரிச்சல், போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதய நோய் வருவதற்கான காரணங்கள்:

இதய நோய் வருவதற்கான காரணங்கள்

நாம் வீட்டில் பிரியாணி செய்யும் போது சரியான பக்குவத்தில் வருவதற்காக சில தவறுக்களை செய்வோம். அதாவது அதிகளவு எண்ணெய் பயன்படுத்துவோம் மேலும் அதில் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கும் போது உடலில் தேவையில்லாத நலனை பாதிக்க நேரிடும்.

உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா 👉👉 எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..?

சர்க்கரை அளவு:

சர்க்கரை அளவு

பிரியாணி சாப்பிட்டவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள் அல்லது இனிப்பு பொருட்களை சாப்பிடுவார்கள் உடலுக்குள் அதிகளவு கார்போஹைட்ரேட்  சேரும் இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும்.

வயிற்று புண் வர காரணம்:

வயிற்று புண் வர காரணம்

சிலர் சாப்பிட்ட பின் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பார்கள். இப்படி செய்வது மற்ற நாட்களை விட பிரியாணி சாப்பிட்ட பின் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால் வயிற்றில் புண் ஏற்படுத்தும். ஏனென்றால் பிரியாணியில் எலுமிச்சை, இஞ்சி, பூண்டு சேர்ப்போம் அல்லவா அதிலிருக்கும் அமில தன்மை குளிர்ச்சியான தண்ணீரை சேரும் போது வயிற்றில் புண்ணை ஏற்படுத்தும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பாலைவிட அதிகளவு சத்துள்ள பொருள் இது. வீட்டில் பயன்படுத்த தவறாதீர்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement