இ-ஷ்ராம் கார்டு எதற்கு பயன்படுகிறது | E Shram Card Benefits in Tamil

Advertisement

இ- ஷ்ராம் கார்டு எதற்காக விண்ணப்பிக்க வேண்டும்? | E – Shram Card Uses in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இ-ஷ்ராம் கார்டு எதற்கு பயன்படுகிறது (E Shram Card Benefits in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இப்பொழுது ஒவ்வொரு துறையுமே மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் மக்களின் வேலையை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ- ஷ்ராம் கார்டு. இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற்று வருகின்றன. நாம் இந்த பதிவில் இ-ஷ்ராம் கார்ட் என்றால் என்ன மற்றும் அது எதற்காக பயன்படுகிறது என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

E Shram Card Benefits in Tamil | E-shram Card Meaning in Tamil:

  • அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ-ஷ்ராம் போர்டல். நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு இதை தொடங்கியுள்ளது.
  • அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய விவரம் அரசுக்கு தெரிய வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அவசர சூழலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் இந்த போர்டல் மூலம் வழங்கப்படும்.
  • இந்த தளத்தில் விண்ணப்பித்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு PMSBY திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும். இது ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு தளமாகும்.

E Shram Card Benefits in Tamil:

மத்திய அரசானது மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தான் இ-ஷ்ரம் கார்டு திட்டம். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் இந்த கார்டு உள்ளவர்களுக்கு 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். எதிர்காலத்தில் பென்ஷன் உதவி தொகையும் பெறலாம். 60 வயதிற்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் மாதம் 3000ரூபாய் பென்ஷன் பெறலாம்.

அம்சங்கள்:

  •  E Shram Card Benefits in Tamil: இந்த இ-ஷ்ராம் தளத்தில் அமைப்பு சாரா தொழிலார்களின் விவரங்கள், ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவை இருக்கும்.
  • மேலும் அமைப்புசாரா தொழிலார்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் இருக்கும். இந்த தளத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்க முடியும்.
  • 16 முதல் 59 வயது வரை உள்ள அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் யார்?

  • EPFO அல்லது ESIC உறுப்பினராக இல்லாதவர்கள், சுய தொழில் செய்பவர்கள், அமைப்புசாரா துறையில் பணிபுரிந்து ஊதியம் வாங்குபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவார்கள்.
  • EPFO அல்லது ESIC உறுப்பினர் மற்றும் Organized Workers விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்: 

E Shram Card Benefits in Tamil
விவசாயத் தொழிலாளர்கள் பால் விவசாயி
காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
செங்கல் சூளை தொழிலாளி மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள்
லேபிளிங் மற்றும் பேக்கிங் தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி
உப்பு தொழிலாளி கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள்
வீட்டு வேலையாட்கள் முடி திருத்துபவர்
செய்தித்தாள் விற்பனையாளர்கள் ரிக்ஷா ஓட்டுனர்
ஆட்டோ டிரைவர் பட்டு உற்பத்தி தொழிலாளி
வீட்டு வேலைக்காரி MGNREGA தொழிலாளர்கள்
தெரு வியாபாரிகள்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • ஆதாருடன் லிங்க் செய்யப்பட்ட தொலைபேசி எண்
  • ஆதார் எண்
  • வங்கி கணக்கு விவரங்கள்
  • வயது 16 முதல் 59 வரை இருக்க வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement