தகவல் அறியும் உரிமை சட்டம் | Thagaval Ariyum Urimai Sattam
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் மூலம் அரசாங்க துறை அல்லது அரசின் உதவியை பெற்று கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களில் உள்ள தகவல்களை ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்துகொள்வதற்கு தேவையான உரிமையை அளிப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகும். இப்பொழுது இந்த சட்டம் எதற்காக பயன்படுகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன?
- அக்டோபர் மாதம் 12-ம் தேதி 2005-ல் இந்த சட்டம் இயற்றப்பட்டது. 2002 வரை இது தகவல் சுதந்திர சட்டமாக இருந்தது. இந்த சட்டம் ஜம்மு காஷ்மீருக்கும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது.
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தங்களுக்கு எந்த துறையின் மீதாவது அரசு இயற்றியுள்ள சட்ட திட்டங்களில் சந்தேகம் இருந்தால் அது எந்த துறையின் கீழ் வருகிறது என்பதை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். அந்த துறை உங்களுக்கு முப்பது நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டிய கால அவகாசம்:
- தனி மனிதனின் உயிர் அல்லது தனியுரிமை தகவல் மூலம் கேட்டால் அதற்கு அந்த துறை 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
- தங்களுடைய கோரிக்கை துணை பொதுத்தகவல் அதிகாரியிடம் கேட்கப்பட்டால் அதற்கு அவர்கள் 35 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
- மூன்றாவது மனிதன் தலையீட்டின் போது கேட்கப்படும் தகவல்களை 40 நாட்களுக்குள் தர வேண்டும்.
- ஒரு நபரின் மீது இருக்கும் வழக்குகள் பற்றிய தகவல்களை பட்டியலிடப்பட்ட அல்லது புலனாய்வு நிறுவனங்களிடமிருந்து மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை பெற முடியும். இதற்கு அந்த துறை 45 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
எந்த மாதிரியான தகவல்களை பெற முடியும்:
- இந்த சட்டத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் ஷஹீத் ராசா புருனே என்பவர் புனேயில் உள்ள காவல் நிலையத்தில் தாக்கல் செய்தார்.
- அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள், ஆவணங்கள், பதிவுகள், பத்திரிக்கை அறிக்கை, அரசு ஆணை, அசையும் சொத்து, அசையா சொத்து வாங்கிய விவரங்கள் மேலும் பல தகவல்களை பற்றி அறிந்துகொள்ள முடியும்.
- சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம், அமைப்பின் அரசாங்க ஆவணங்கள், அரசாங்கத்தில் நேரடியாக நிதி உதவி பெறுபவர்கள் அல்லது மறை முகமாக நிதி உதவி பெறுபவர்கள் இந்த துறை பற்றிய சந்தேகம் இருந்தால் இச்சட்டத்தின் மூலம் தகவல்களை பெற முடியும்.
விண்ணப்பம் பற்றிய தகவல் – Thagaval Ariyum Urimai Sattam:
- மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள பொது தகவல் ஆணையருக்கு விண்ணப்பத்தை ரூ.10 கட்டணம் செலுத்தி அனுப்பி வைக்க வேண்டும். தங்களுக்கு தேவையான தகவல்கள் ஒரு மாதம் ஆகியும் வரவில்லையெனில் மத்திய தகவல் ஆணையத்தை (CIC) அணுகலாம்.
- இதற்கு தனியாக எந்த விண்ணப்பமும் இல்லை. தங்களுடைய பெயர், முகவரி, எதை பற்றிய தகவல் போன்ற விவரங்கள் உள்ள விண்ணப்பம் போதுமானது.
- இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இணையத்தள முகவரி rtionline.gov.in
தகவல் பெற முடியாத அமைப்புகள்:
- 8-வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 11 விவரங்களை கொடுக்காமல் அலுவலர் மறுக்க முடியும்.
- வெளிநாட்டு அரசாங்கத்தின் ரகசிய தகவல்.
- நாட்டுடைய போர்திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியாது.
- அறிவியல் மற்றும் பொருளாதார தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியாது.
- சட்டமன்றத்தின் சிறப்புரிமை மீறல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது.
இச்சட்டத்தை நிர்வகிக்கும் அமைப்புகள் – Thagaval Ariyum Urimai Sattam Tamil
- தலைமை தகவல் ஆணையர். இவருடைய பதவி காலம் 5 வருடம். இவர் தலைமை தேர்தல் ஆணையருக்கு நிகரானவர்.
- குடியரசு தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தகவல் ஆணையர்.
- மத்திய பொது தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்.
- ஆளுநர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொது தகவல் அதிகாரி அலுவலகம். இவர்கள் எல்லோரும் இச்சட்டத்தை நிர்வகிக்கும் அமைப்புகள் ஆகும்.
இச்சட்டத்தில் உள்ள அதிகாரிகளை தேர்ந்தெடுப்பவர்கள் – Thagaval Ariyum Urimai Sattam:
- மத்திய அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பவர்கள் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை மந்திரி.
- மாநில அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பவர்கள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கபடும் அமைச்சரவை மந்திரி.