வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

Advertisement

வரலாற்றில் இன்று பிப்ரவரி 15

Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர்.

சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்திய வரலாற்றில் இன்று | இன்றைய நாளின் சிறப்பு என்ன | Varalatril indru today

பிப்ரவரி 15 (February 15) கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன.

  • செர்பியா தேசிய தினம்
  • அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டத – 1764
  • வானியல் ஆய்வாளர் கலிலியோ பிறந்தார். – 1564
  • யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது – 2005
  • ‘public intelligencer’ என்ற லண்டன் பத்திரிக்கையில் தான் முதல் முறையாக விளம்பரங்கள் வெளியாயின. – 1675
  • கலிலியோ கலிலி பிறந்த தினம்

இன்றைய நாள் நிகழ்வுகள் பிப்ரவரி 15- Today History in Tamil For Students

  • 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.
  • 706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.
  • 1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.
  • 1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.[1]
  • 1637 – புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.
  • 1690 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
  • 1796 – டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.[2][3]
  • 1798 – முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1865 – இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.[2]
  • 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
  • 1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.
  • 1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.[4]
  • 1923 – கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.
  • 1933 – மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.
  • 1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.
  • 1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
  • 1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
  • 1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.
  • 1972 – ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.
  • 1982 – நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.
  • 1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
  • 1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.
  • 1994 – உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
  • 1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.
  • 2001 – முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.
  • 2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.
  • 2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.
  • 2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.
  • 2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.


இன்றைய நாளில் பிறந்தவர்கள் பிப்ரவரி 15:

  • 1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642)
  • 1748 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1832)
  • 1820 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1906)
  • 1858 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (இ. 1938)
  • 1861 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1947)
  • 1899 – மணி மாதவ சாக்கியர், கேரளக் கூத்துக் கலைஞர் (இ. 1990)
  • 1922 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் அரசுத்தலைவர்
  • 1923 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (இ. 1999)
  • 1931 – மேக்சின் சிங்கர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் (இ. 2024)
  • 1949 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
  • 1952 – பிரதாப் போத்தன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்
  • 1965 – கிரெய்க் மேத்தியூஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
  • 1982 – மீரா ஜாஸ்மின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய நாள் இறப்புகள் பிப்ரவரி 15:

  • 1145 – இரண்டாம் லூசியசு, திருத்தந்தை
  • 1869 – கலிப், இந்தியக் கவிஞர் (பி. 1796)
  • 1965 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1919)
  • 1966 – கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ, கொலம்பிய மதகுரு, இறையியலாளர் (பி. 1929)
  • 1973 – டி. கே. சண்முகம், தமிழக நாடகத், திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1912)
  • 1973 – அழகு சுப்பிரமணியம், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர் (பி. 1915)
  • 1974 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், பாடகர், இயக்குநர் (பி. 1910)
  • 1988 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1918)
  • 2004 – மன்னவன் கந்தப்பு, ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)


ன்றைய நாள் சிறப்புகள்:

  • விடுதலை நாள் (ஆப்கானித்தான்)
  • பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)
  • முழுமையான பாதுகாப்பு நாள் (சிங்கப்பூர்)
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement