பொது சேவை மையம் தொடங்குவது எப்படி? | How To Start E Sevai Maiyam in Tamil

e sevai maiyam thodanguvadhu eppadi

பொது சேவை மையம் தொடங்குவது எப்படி?

How To Start e Sevai Maiyam: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பொது சேவை மையம் என்றால் என்ன மற்றும் அந்த மையத்தை நாம் எப்படி தொடங்குவது எப்படி என்றும் பார்க்கலாம். பொது சேவை மையம் என்பது Community Certificate, Widow Certificate, Widow Pension, Native Certificate, First Graduate Certificate போன்ற ஆவணங்களை இணையத்தளம் மூலமாக பெற்று கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது.

தனியார் இ சேவை மையம் தொடங்குவது எப்படி? – Pothu Sevai Maiyam:

  • இ-சேவை மையத்தை தொடங்குவதற்கு கணினி அறிவும், தமிழ் ஆங்கிலம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
  • பொது சேவை மையம் தொடங்குவதற்கு முன்னர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் Register செய்ய வேண்டும். தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் தங்களது Company அல்லது கடையின் பெயரில் Register செய்ய வேண்டும்.
  • Register செய்தவுடன் தங்களது தொலைபேசி எண்ணிற்கு OTP வரும். OTP-ஐ  உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.
கூரியர் தொழில் செய்து Rs.50000 லாபம் பெறலாம் ..!

ஆதார் சேவை மையம் தொடங்குவது எப்படி? தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?

  • Registration-க்கு தேவையான ஆவணங்கள் Pan Card, GST மற்றும் Company Registration வைத்து பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவுடன் உங்களுக்கு User Name மற்றும் Password, Citizen Access Number, Unique ID கொடுத்துவிடுவார்கள்.

Csc பொது சேவை மையம் தொடங்குவது எப்படி? – How To Start e Sevai Maiyam in Tamil

  • Citizen Access Number (CAN) என்றால் ஏதேனும் Certificate Access பண்ண வேண்டுமெனில் Third Parties -யிடம் Access வாங்க வேண்டி வரும், ஆனால் CAN-ல் நீங்களே Register செய்வதன் மூலம் Certificates உங்களால் Access பண்ண முடியும்.
  • CAN எப்படி பதிவு செய்ய வேண்டும் என்றால் Company அல்லது கடையின் பெயரில் Register செய்து முடித்த பிறகு DashBoard போக வேண்டும். அதில் Revenue Department என்பதை கிளிக் செய்ய வெண்டும். Click செய்த பிறகு ஒரு Application Open ஆகும். அதில் தங்களது விவரங்கள் மற்றும் ஆவண விவரங்களை உள்ளிட்டவுடன் சிறிது நேரத்திற்கு பிறகு Unique ID வந்து விடும். மேற்கண்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே இ-சேவை மையம் தொடங்க முடியும்.
மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்

அரசு இ சேவை மையம் தொடங்குவது எப்படி? – பதிவு செய்வதற்கு தேவையானவைகள்:

  • Pothu Sevai Maiyam: Registration செய்வதற்கு Rs.10,000 பணம் DD மூலம் செலுத்த வேண்டும். இந்த பணத்தை TN Arasu Cable Tv Corporation Limited, சென்னை என்ற முகவரிக்கு DD அனுப்ப வேண்டும்.
  • DD எடுத்த பிறகு தங்களுடைய Application சரியாக இருந்தால் மட்டும் Rs.40,000 செலுத்த வேண்டும். மேற்கண்ட ஆவணங்கள் சரியாக இல்லையெனில் Rs.10,000 திரும்ப கொடுத்து விடுவார்கள்.
  • நீங்கள் Rs.50,000 செலுத்தி இ-சேவை மையம் தொடங்கிவிட்டிர்கள் எனில் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த Rs.50,000 தங்களுடைய Account-ல் செலுத்தி விடுவார்கள்.
  •  TAT TV என்ற நிறுவனம் தான் இந்த சேவையை வழங்குவதால் 1 Year Contract மூலம் 30% Profit அவர்கள் எடுத்து கொண்டு 70% Profit உங்களுக்கும் கிடைக்கும்.
தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி?

Pothu Sevai Maiyam – இ சேவை மையம் தொடங்குவது எப்படி? – இ-சேவை மையம் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள்:

  • How To Start Esevai Maiyam: பொது சேவை மையம் தொடங்குவதற்கு 100 ஸ்கொயர்பீட் இடம், கம்யூட்டர், ஜெராக்ஸ் மெஷின், லேமினேஷன், கலர் ஜெராக்ஸ், போன்ற பொருட்களையும் வாங்க வேண்டும் மற்றும் பணம் மொத்தமாக Rs.50,000 தேவைப்படும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல்