வெள்ளரிக்காய் முகத்திற்கு
இந்த வெயில் காலம் வந்தாலே முகம் பொலிவிழந்து காணப்படும். முகத்தை பளபளப்பாக இருப்பதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் மற்றும் பேஷ் வாஷ் என்று பயன்படுத்தினாலும் இந்த வெயிலுக்கு எந்த வித பலனும் இருக்காது. நீங்கள் முகத்தை அடிக்கடி கழுவி கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
நீங்கள் கூறியுள்ளவற்றை சரியாக செய்து கீழே உள்ள குறிப்பை பயன்படுத்தினால் நிச்சயம் இந்த வெயில் காலத்தில் உங்களின் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முடியும். சரி வாங்க அது என்ன குறிப்பு என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வெள்ளரிக்காய் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்தல்:
வெள்ளரிக்காயை எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் இதிலிருந்து சாற்றை மட்டும் வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த வெள்ளரிக்காய் சாற்றுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்தி முகத்தை நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு 10 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான நீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
Cucumber Face Mask for Glowing Skin:
வெள்ளரிக்காய் எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும், இதனுடன் தயிர் 1/2 கப் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும், இதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
மேல் கூறியுள்ள பேக்குகளில் ஏதவாது ஒரு பேக்கை மட்டும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலே முகம் பளபளப்பாக மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |