ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது இருக்கிறது. இந்த நம்பிக்கையானது ஒவ்வொருவரிடமிருந்து கடவுள் நம்பிக்கையானது வேறுபடும். சில நபர்கள் காலை மற்றும் மாலை நேரம் என இரண்டு வேலையும் விளக்கேற்றி வழிபடுவார்கள். சில பேர் மாலை நேரம் மட்டும் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
இப்படி வழிபடும் போது கடவுளுக்கு உரிய பூஜை மற்றும் பிரசாதங்களை செய்து வணங்குவார்கள். இப்படி கடவுளுக்கு உரியவற்றை செய்து வணங்கும் போது அவருடைய அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அது போல் அவர்களுக்கு உரிய மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை பாடுவதாலும் கடவுளின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் மந்திரத்தை கூறுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
வாழ்க்கையில் உயர்வதற்கு முருக மந்திரம்:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அந்த வகையில் முருகப்பெருமான் பலருக்கும் பிடித்த கடவுளாக இருக்கிறார். இந்த பழனி, வடபழனி, சுவாமிமலை என பல இடத்தில் குடியிருக்கிறார். இவருக்கு சஷ்டி அன்று விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரத்தை கொடுப்பார்.
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
இந்த மந்திரத்தை சஷ்டி அன்று சொன்னாலும் சரி மற்ற நாட்களில் சொன்னாலும் சரி உங்களுடைய வாழ்க்கையில் என்ன கஷ்டம் இருந்தாலும் அதிலிருந்து வெளி வந்துவிடலாம். உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைந்து கொண்டே போகுவீர்கள்.
எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:
காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் முருக பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பிறகு ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் என்ற மந்திரத்தை 108 முறை அல்லது எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். இத்தனை முறை தான் சொல்ல வேண்டும் என்ற கணக்கு கிடையாது.
இந்த மந்திரத்தை கூறி பூஜை செய்வதால் உங்களின் வாழ்க்கையில் இது வரை கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்ற பாதையை அடைவீர்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |