குலதெய்வத்தை கனவில் கண்டால்
பொதுவாக இரவு தூங்கும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு தோன்றுகிறது. நாம் காணும் கனவுகளில் சில கனவுகள் ஞாபகம் இருக்கும், சில கனவுகள் ஞாபகம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் நாம் காணும் கனவிற்கு பலன்களும் இருக்கின்றது. எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமைகளை உணர்த்தி கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் சில கனவுகள் உணர்த்துகின்றது. அந்த வகையில் இன்றைய அப்பதிவில் குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
குலதெய்வம் கனவில் வந்தால்:
குலதெய்வத்தை கனவில் கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை குறிக்கிறது. வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் காணப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். மேல் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுபர்களுக்கு கிடைக்கும்.
அதுவே குலதெய்வத்தை வழிபடாதவர்களின் கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை குறிக்கிறது.
குலதெய்வம் கோவில் கனவில் வந்தால்:
குலதெய்வ கோவிலை கனவில் கண்டால் நீங்கள் மனதில் நினைக்கின்ற காரியம் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைக்க கூடிய செயல்கள் நிறைவேறும் என்பதையும் குறிக்கிறது.
தொடர்புடைய கனவு பலன்கள் |
உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..! |
கனவு பலன்கள்..! |
கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன் |
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் |
சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |