Suriyan Peyarchi Palangal
வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நவகிரங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே ஆன்மீகத்தில் 12 ராசிகளுக்கான ராசிபலன்களும் கூறப்படுகிறது. அதாவது, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். அவ்வப்போது அவற்றின் தாக்கம் பன்னிரண்டு ராசிகளிலும் இருக்கும். இந்த 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு நற்பலனைகளையும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான பலன்களை அளிக்கும். இதனை வைத்தே ஜாதகத்தில் உனக்கு இக்காலத்தில் நேரம் நன்றாக இருக்கிறது, இல்லை என்று கணித்து கூறுவார்கள். எனவே அந்த வகையில், சூரிய பகவான் நவம்பர் 17 ஆம் தேதி அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் ராஜா வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் தனுசு ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். முக்கியமாக வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும். மேலும், தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மேஷ ராசி:
சூரிய பகவானின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். அதே நேரத்தில் வேலை செய்பவர்கள் பணியிடத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வளர்ச்சிக்காக நல்ல வாய்ப்பை பெறலாம்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் சஞ்சாரம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை அனைத்தையும் நீங்கள் எளிதில் தீர்த்து விடுவீர்கள். மேலும், இக்காலத்தில் புதிய வருமானம் அதிகரிக்கவும் செய்யும். எனவே விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிகளின் காட்டில் பணமழை
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |