Unfaithful Zodiac Signs in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக மற்றவர்களுக்கு துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இடம் பெறுகின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணம் என்பது இருக்கும். அவ்வளவு ஏன் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே குணங்கள் வெவ்வேறாக தான் இருக்கும்.
அதுபோல மனிதர்களிடம் கோபம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, பாசம், பகை, துரோகம், பொறாமை போன்ற பல குணங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக மற்றவர்களுக்கு துரோகம் செய்ய நினைக்கும் ராசிக்காரர்கள் யார் என்று இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் துரத்தப்போகும் ராசிகள் இவர்கள் தானா
மற்றவர்களுக்கு துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் யார்..?
பொதுவாக நம் வாழ்க்கையில் மற்றவர்கள் நமக்கு தரும் மிகப்பெரிய வலியே துரோகமாக தான் இருக்கும். துரோகம் என்பது நாம் நம்பிய ஒருவரிடம் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது. அதனால் இவ்வுலகில் பிறந்த யாராக இருந்தாலும் தனக்கு துரோகம் செய்தவர்களை தன் வாழ்நாளில் மறக்கவும் மாட்டார்கள், அவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசி நட்சத்திரங்களின் ஆளுமை பண்புகள் ஒவ்வொரு ராசிகளையும் ஏதோ ஒரு சூழ்நிலையில் துரோகம் செய்ய தூண்டும். அப்படி சூழ்நிலையின் காரணமாக மற்றவர்களுக்கு துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் யார் என்று இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி:
பொதுவாக விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் மேல் அக்கறை காட்டுபவர்களிடம் அதிகளவு விசுவாசமாக இருப்பார்கள். இவர்கள் அனைத்திலும் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தங்களை பாதுகாக்க மற்றும் காப்பாற்றி கொள்வதற்காக மற்றவர்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மேல் இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஏதாவது மோதல்கள் ஏற்படும் சூழலில் இவர்களின் மனம் இவர்களை துரோகம் செய்ய தூண்டுகிறது.
சந்திர கிரகணத்துக்கு பிறகு சூரியன், ராகு, கேது பெயர்ச்சியால் ராஜ யோகம் கிடைக்கும் ராசிகள்
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிகளை காட்டிலும் இவர்கள் கருத்துக்களுக்கு அதிக முன்னுரை கொடுப்பார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களிடம் அதிகளவு பழ கமாட்டார்கள். இருந்தாலும் சில நேரங்களில் இவர்களின் எண்ணம் மற்றவர்களுக்கு துரோகம் செய்ய தூண்டுகிறது. மேலும் இவர்கள் அலட்சியமானவர்களாக இருக்கிறார்கள்.
துலாம் ராசி:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இராஜதந்திரமாக செயல்படுவார்கள். வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இருந்தாலும் சில நேரங்களில் உறுதியற்ற தன்மை மற்றும் கவனக்குறைவால், மற்றவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
தனுசு ராசி:
பொதுவாக தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் வாழ்க்கையின் மேல் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் இவர்களிடம் காணப்படும் பயம் சில நேரங்களில் இவர்களை நம்பிக்கை துரோகம் செய்ய அனுமதிக்கிறது. இதனால் தனுசு ராசிக்காரர்களின் உடன் இருப்பவர்களுக்கு அதிக காயத்தை ஏற்படுத்துகிறது.
100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இனி இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது..
மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக தைரியமானவர்களாகவும், அனைத்திலும் உறுதியானவர்களாகவும் இருப்பார்கள். இருந்தாலும் இவர்களிடம் காணப்படும் மனக்கிளர்ச்சி குணத்தின் காரணமாக சில நேரங்களில் அவர்களை மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய தூண்டுகிறது.
மிதுன ராசி:
பொதுவாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். ஆனால் இவர்களிடம் உறுதியற்ற தன்மை அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொள்ளும் பண்புகளை கொண்டிருப்பார்கள். எனவே இந்த குணங்களின் காரணமாக இவர்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |