வெள்ளிக்கிழமை தானம் பொருட்கள்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெள்ளிக்கிழமை தானம் கொடுக்கக்கூடாத பொருட்கள் மற்றும் கொடுக்க வேண்டிய பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே தெய்வீகம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. அதாவது, கடவுளுக்கு உகந்த நாளாக இருக்கிறது. ஆன்மீகத்தின்படி இன்றைய தினத்தில் நாம் பிறருக்கு சில பொருட்களை தானமாக வழங்க வேண்டும். அதேபோல், ஒரு சில பொருட்களை தனமாக கொடுக்கவும் கூடாது. இதனை தான் அறிந்து முறையாக வழிபட்டு வந்தால் வீட்டில் நன்மையே நடக்கும்.
ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் வெள்ளிக்கிழமை அன்று எந்தெந்த பொருட்களை எல்லாம் தானம் செய்ய கூடாது என்றும் எந்தெந்த பொருட்களை எல்லாம் தானம் செய்ய கூடாது என்றும் இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்
வெள்ளிக்கிழமை தானம் கொடுக்க கூடாத பொருட்கள்:
- வெள்ளிக்கிழமை அன்று பிறருக்கு கடன் கொடுக்க கூடாது. அவ்வாறு கொடுத்தால் கடன் கொடுப்பவருக்கு கடன் வாங்குபவருக்கும் நல்லது அல்ல. கடன் வாங்கிய நாளில் இருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வரும்.
- வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரையை தானமாக கொடுக்க கூடாது. சர்க்கரை மட்டுமின்றி வெள்ளைநிற பொருட்கள் எதுவாயினும் அந்த பொருட்களை வெள்ளிக்கிழமை அன்று பிறருக்கு கொடுக்க கூடாது.
வெள்ளிக்கிழமை தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்:
- உங்களால் முடிந்த உலோக தானங்கள் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உன்னதமான தானங்களை செய்ய வேண்டும்.
- மற்றவர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமை எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்.?
வெள்ளிக்கிழமை அன்று அணைத்து விதமான கடவுள்களையும் வணங்கலாம் . எல்லா கடவுளையும் அன்றைய தினத்தில் வணங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எல்லா வகையிலும் நமக்கு நன்மை பயக்கும்.
கோடி கடனையும் எளிதில் போக்க வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்யுங்க
வெள்ளிக்கிழமை அரிசி தானம் செய்யலாமா.?
வெள்ளிக்கிழமை அரிசி தானம் செய்யக்கூடாது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் வாங்கி வீட்டில் வைக்கலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |