திருமணத்திற்க்கு பிறகு பணக்காரர்களாக மாறும் ராசிக்காரர்கள்
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பது எல்லாரும் ஆசையாக இருக்கிறது. இதை அவர்களின் ராசியை வைத்து கணக்கிடலாம். அதாவது சில ராசிக்காரர்கள் பிறக்கும் போதே செல்வ செழிப்புடன் பிறக்க கூடியவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் அவர்கள் வளரும் போது செல்வ செழிப்பு உயரும் என்று ஆன்மிகத்தில் கணித்திருப்பார்கள். அது போல ஆண்கள் வாழ்க்கையில் ஏதவாது தவறு செய்கின்ற போது நம் முன்னோர்கள் உனக்கெல்லாம் பொண்டாட்டி வந்தா சரியாகும் என்று சொல்வார்கள். சிலருடைய வாழ்க்கையானது மனைவி வந்த பிறகு சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஆன்மிகத்தில் திருமணத்திற்கு பிறகு சில ஆண் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயருமாம். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
திருமணத்திற்க்கு பிறகு பணக்காரர்களாக மாறும் ஆண் ராசிக்காரர்கள்:
மீனம்:
மீன ராசிக்காரர்கள் கற்பனை திறன் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் கருணை மற்றும் இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவரின் வளர்ச்சிக்கு துணை பக்க பலமாக இருப்பார்கள். துணையின் ஆலோசனை அவரது வருமானத்தை அதிகரிக்கும். மேலும் இவர் திருமணத்திற்க்கு முன் இருந்த நிதிநிலைமையை விட திருமணத்திற்க்கு பின் நிதிநிலைமை உயர்ந்திருக்கும்.
கருப்பு கயிற்றை இந்த ராசிக்காரர்கள் அணிய கூடாதாம்.!
மகரம்:
மகர ராசிக்காரர்கள் எந்த செயலையும் பொறுப்பாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் கஸ்டமான செயலையும் இவர்களின் புத்தி கூர்மையால் அழகாக முடித்து காட்டுவார்கள். திருமணம் வாழ்க்கையில் இவரது துணை நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பக்க பலமாக இருப்பார்கள். இவரது துணை வருமானத்தை ஈட்ட கூடிய முதலீடு திட்டங்களில் ஈடுபடுவார்கள். இதனால் உங்களின் நிதிநிலைமை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இலட்சியத்தை உடையவர்களாக இருப்பார்கள். இவரது வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். மேலும் புது புது வாய்ப்புகள் தேடி வரும். இவரை நிதிநிலைமையை அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும் துணையின் உறவுகளால் செல்வம் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
துலாம்:
இந்த ராசி ஆண்கள் வசீகர தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கையில் எல்லா நேரமும் சாதகமானதாக இருக்கும். மேலும் நேர்மையாக இருக்க கூடிய குணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமணத்திற்கு பிறகு வேலையில் உள்ள சக பணியாளர்கள் பக்க பலமாகப் இருப்பார்கள். நிதிநிலைமையை அதிகப்படுத்தருவதற்கு இவரின் துணையானவள் பக்க பலமாக இருப்பார்கள்.
கன்னி:
கன்னி ராசி ஆண்கள் என்ன தான் சம்பாதித்தாலும் அதனை சேமிப்பதற்கான வழிகளை தேட மாட்டார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு பொறுப்பாக மாறி விடுவார்கள். காரணம் தன் குடும்பத்திற்காக சேமிப்பதற்கும் எதிர்கால தேவையை நினைத்து மாறி விடுவார்கள். பணியிடத்தில் அதிக நேரம் உழைப்பார்கள் இதனால் அவர்களுக்கு பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும். இதனால் பணக்காரர்களாக மாறுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி ஆண்கள் கடை உழைப்பாளியாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். நீண்ட கால திட்டமிடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமணத்திற்கு பிறகு நண்பர்களின் துணையுடன் தொழிலில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் பொறுப்பு அதிகரிப்பதால் பணத்தை அதிகமாக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது. இதனால் அவர்கள் செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு. சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |