தேர்தல் பத்திரம் என்றால் என்ன
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் தேர்தல் பத்திரம் என்றால் என்ன.?என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. தேர்தல் பத்திரம் என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றிய முழு விவரங்கள் பற்றி தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பொதுவாக, தேர்தல் பற்றிய பல விவரங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அனைவரது மனதிலும் இருக்கும். ஆகையால், தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றான தேர்தல் பத்திரம் என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன.?
தேர்தல் பத்திரம் என்பது, ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்திய நிறுவனம் தான் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்கும் முறையாகும். தேர்தல் பத்திரதத்தை பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இது உறுதிமொழி பத்திரம்(Promissory note) என்றும் கூறப்படுகிறது.
இப்பத்திரங்களுக்கு வட்டி கிடையாது. ஒரு இந்தியன் குடிமகன் அல்லது இந்திய நிறுவனம், அவர்கள் விரும்பும் தகுதியுள்ள அரசியல் கட்சிக்கு இந்த தேர்தல் பத்திரங்களை வழங்கலாம். அதுமட்டுமில்லாமல், இந்த பத்திரங்களை டிஜிட்டல் முறையில் அல்லது காசோலை மூலம் வாங்க அனுமதிக்கப்படும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.
ஒரு கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற வேண்டும் என்றால், சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். நிதி வாங்குபவர்களின் விவரங்கள் பிறருக்கு தெரியாமல் இருப்பதாலும், நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் மோசடிகள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
மத்திய அரசு 2017ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு, கடந்த 2018 ஜனவரி 29 முதல் தேர்தல் பத்திர முறை நடைமுறைக்கும் வந்தது.
இத்திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று எதிர் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்பிறகு, பல தாக்களுக்கு பிறகு, தற்போது தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன.?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |