சரஸ்வதியின் மூல மந்திரம்| Saraswati Moola Mantra in Tamil
அனைத்து ஆன்மிக நெஞ்சங்களுக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் கல்வி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் தெய்வமாக திகழ்கின்ற சரஸ்வதி தேவியின் அருளை பெற உதவுகின்ற சரஸ்வதியின் மூல மந்திரத்தையும் அதனை கூறுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
Saraswati Moola Mantra in Tamil :
ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ
ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ
ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ
ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ
ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ
பலன்கள்:
வீணையை கையில் ஏந்திக்கொண்டு அருள் புரிந்துகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் மூல மந்திரத்தை கல்வி பயில்கின்ற மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லுகின்ற பெரியவர் வரை அனைவருமே சரஸ்வதியை மனதில் நினைத்து கொண்டு தினமும் காலை மற்றும் மாலை என இருவேலைகளிலும் 108 முறை கூறுவது நன்மையை அளிக்கும்.
அதேபோல் இம்மந்திரத்தை புதன்கிழமை மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தில் மாலை வேலையில் சரஸ்வதியை மனதில் நினைத்து கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி 108 முறை அல்லது 1008 முறை சொல்வதினால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆயுளை அதிகரிக்க உதவும்.
மேலும் அவர்களின் எண்ணங்கள், சிந்தனை ஆகியவை நன்கு தெளிவு பெரும். குடும்பத்தில் உள்ள கல்வி பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு நல்ல அறிவும், ஆற்றலும் அதிகரிக்கும்.
மேலும் நீங்கள் தொடங்குகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களுக்கு அனைத்து விஷயங்களை பற்றிய ஞானம் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |