Hair Grow Faster And Thicker Naturally Oil
வாசகர்களே வணக்கம்..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்களை விட பெண்களே அழகை மேம்படுத்த அதிக நேரத்தை செலவிடுவார்கள். அப்படி அனைத்து பெண்களுக்கும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற பேராசை இருக்கும்.
அதற்காக கடைகளில் இருந்து இரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்துவிடும். அதனால் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் மாற்றகூடிய எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Hair Grow Faster And Thicker Naturally Oil in Tamil:
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
- கரிசலாங்கண்ணி (கையாந்தரை) – 2 கைப்பிடி அளவு
கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து கொள்ளவும்:
கையாந்தரை என்று சொல்ல கூடிய கரிசலாங்கண்ணி இலைகளை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை தண்ணீரில் 2 முறை நன்றாக அலசி கொள்ள வேண்டும்.
பின் அந்த இலைகளை ஒரு துணியில் எடுத்து வைத்து 1 மணி நேரம் வரை ஈரம் இல்லாமல் உலர்த்த வேண்டும். பின் அதை எடுத்து வைத்து கொள்ளவும். இந்த இலைகள் முடி பிரச்சனை அனைத்திற்கும் பயன்படுகிறது. முடி நீளமாகவும், அடத்தியாகவும் மற்றும் கருமையாகவும் நரை முடியை சரி செய்வதற்கும் இந்த இலைகள் பயன்படுகின்றன.
வெயிலில் எவ்வளவு அலைந்தாலும் உங்கள் முகம் கருக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க |
கடாய் எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து ஊற்றி கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயை உங்களுக்கு தேவையான அளவு கூட எடுத்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முடி வளர்ச்சி என்றாலே தேங்காய் எண்ணெய் இல்லாமல் இருக்காது. நாம் சிறு வயதில் இருந்தே முடிக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்தி வருகிறோம். அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும்.
எல்லாரும் உங்கள பாத்து உங்க முடி மாதிரி வளர டிப்ஸ் சொல்லுங்கன்னு கேப்பாங்க அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க |
பின் நாம் உலர்த்தி எடுத்து வைத்துள்ள இலைகளை எண்ணெயில் போட்டு 10 நிமிடம் வரை நன்றாக கலந்து விட வேண்டும். பின் எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதை எப்பொழுதும் முடிக்கு தடவுவது போல முடியின் வேர் பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் மற்றும் கருமையாகவும் வளரும்.
காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |