உங்க முடி வெறித்தனமா வளர இந்த ஒரு பொடி மட்டும் போதும்..!

Advertisement

Long Hair Growth Hair Powder At Home 

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருந்தாலும் ஆண்கள் அதற்காக நேரத்தை செலவிட மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி அவர்கள் நேரத்தை செலவிடும் விஷயங்களில் முடி பராமரிப்பும் ஓன்று. அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்காக கடைகளில் கிடைக்கும் ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் முடிக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் இனி கடைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இந்த இயற்கையான பொடியை வீட்டிலேயே தயார் செய்து முடிக்கு பயன்படுத்துங்கள். உங்கள் முடியின் அசுர வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சர்யபடுவீர்கள். சரி வாங்க நண்பர்களே அதை பற்றி விரிவாக காண்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Hair Powder At Home in Tamil: 

  1. பச்சை பயிறு – 1 கப்
  2. வெந்தயம் – 1 கப்
  3. கருவேப்பிலை – 1 கப்

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

முதலில் மேல்கூறிய பொருட்களை உங்களுக்கு தேவையான அளவு அதாவது ஒரு மாதத்திற்கு இந்த பொடி வேண்டுமென்றால் அதற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சை பயிறு மற்றும் வெந்தயத்தை மட்டும் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் கருகிவிடாமல் வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின் அதே கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை போட்டு நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை ஓரே இரவில் மாயமாய் மறைய செய்ய இந்த ஒரு பொருள் போதும்

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

பின் நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி போல அரைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது முடியின் வளர்ச்சியை அதிகபடுத்தும் பொடி தயாராகி விட்டது.

இந்த பொடியை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். நீங்கள் தலை குளிக்க செல்லும் முன் இந்த பொடியை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனி பகுதி வரை அப்ளை செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் உங்கள் முடியில் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கலாம்.

இதுபோல செய்து வந்தால் உங்கள் முடியின் அசுர வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மேலும் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்ற தலை முடி பிரச்சனை அனைத்திருக்கும் இந்த பொடி நல்ல தீர்வாக இருக்கும்.

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement