வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடன் அடைப்பதற்கான நல்ல நேரம், கிழமை, நட்சத்திரம் முழு விவரம்

Updated On: November 3, 2025 5:38 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கடன் அடைக்க சிறந்த நேரம் | கடன் அடைக்க உகந்த ஓரை

இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள. இருவரும் சம்பாதித்து என்ன பயன் கடன் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கடனை அடைப்பதற்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆக இப்படிப்பட்ட கடனை அடைக்க வேண்டும் என்று தான் எல்லாரும் உழைக்கிறோம். கடன் சுமை வரக்கூடாது, நான் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். இதற்காக கோவில் குளத்திற்கு சென்று ஏதும் பரிகாரம் இருந்தால் செய்கிறோம்.

ஆனால் ஆன்மிகத்தில் எந்த பரிகாரமும் செய்யாமல் குறிப்பிட்ட நேரத்தில் கடனை கொடுத்தால் மீண்டும் கடன் சுமை இருக்காது என்று எத்தனை பேருக்கு தெரியும். தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கடன் அடைக்க நல்ல நேரம்:

Kadan Adaikka Sirantha Neram in Tamil

முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் உறுதியாக இருந்தாலே நமது கடன்களை சீக்கிரம் அடைத்துவிட முடியும்.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் கடனை திருப்பி அளிக்க ஆரம்பித்தால் நீங்கள் வாங்கிய கடனை மிக விரைவிலேயே அடைத்துவிட முடியும் அது என்ன நேரம் மற்றும் நாட்கள் என்று பார்க்கலாம்.

கடனை அடைக்க உகந்த நேரம்:

முதலில் நீங்கள் வாங்கியுள்ள கடனை செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் (காலை 6 மணியிலிருந்து-7 மணிக்குள், அல்லது மதியம் 1 மணியிலிருந்து  -2 மணிக்குள்) திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம்.

கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம்

கடனை அடைக்க உகந்த ஓரை:

செவ்வாய் கிழமை என்பது கடனை அடைப்பதற்கான நல்ல நேரம் ஆகும். அந்த  செவ்வாய் கிழமை அன்று குளிகை மதியம் 12 மணியிலிருந்து – 1.30 மணிக்குள்  வரும் அந்த நேரமே கடனை அடைக்க சிறந்த நேரமாகும்.

மேலும் சனி ஓரையும் நீங்கள் வாங்கிய கடனை திரும்பிக்கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம் மற்றும் கடன் வாங்கும் நிலைமையும் ஏற்படாது.

கடனை அடைக்க உகந்த நாள்:

Maitreya muhurtham 2024 for repaying loan : வாங்கிய கடனை திருப்பி அடைக்க  போறீங்களா?...இந்த நாளில் பண்ணுங்க...இனி கடனே வாங்க மாட்டீங்க

அடுத்து கேது மற்றும் செவ்வாய் இணைந்த நேரமான மைத்ர முகூர்த்த நேரமும் கடனை அடைக்க சிறந்த நேரமாகும்.

அதேபோல ஞாயற்றுக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் கடனை அடைக்க சிறந்த நாள் ஆகும்.

கடனை அடைக்க உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் எது என்றால் கரிநாள் ஆகும். ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று கரிநாட்கள் வரும் அந்த நாட்களை நீங்கள் வாங்கிய கடனை திரும்பிக்கொடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடனை அடைக்க மரண யோக நாட்களும் சிறந்த நாட்கள் ஆகும்.

கடனை அடைக்க உகந்த நட்சத்திரம்:

மேலும் சில நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களிலும் கடனை அடைப்பது மிகசிறந்த பலனை அளிக்கிறது. அவை என்னென்ன நட்சத்திரங்கள் என்றால் அஸ்வினி மற்றும் அனுஷம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடனை திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம்.

மேலே கூறியுள்ள நேரம், நாட்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஓரை ஆகியவற்றில் நீங்கள் வாங்கிய கடனை அடைக்க உகந்த நாட்கள் மற்றும் நேரம் ஆகும்.

கடன் கொடுக்க கூடாத நாட்கள்:

கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, விசாகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் வரும் நாட்களில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

கடன் வாங்க உகந்த ஓரை:

குரு சர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும்போது கடனை வாங்க கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வணங்க கூடாது.

கடன் வாங்க உகந்த நாட்கள்:

 நீங்கள் கடன் வாங்குவதாக இருந்தால் ஆன்மிகத்தின் படி, திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடனை வாங்கலாம். இந்த கிழமைகளில் நீங்கள் பணத்தை வாங்குவதன் மூலம் கடனை சீக்கிரமே கொடுக்கலாம்.  

கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now