எலுமிச்சை பழம் கனவில் வந்தால் என்ன பலன் | Elumichai Palam Kanavil Vanthal Enna Palan
வணக்கம் நண்பர்களே… காலை எழுந்தவுடன் எல்லாருக்கும் ஒரே விதமான யோசனை வருவது இல்லை. சிலர் இன்று நாள் எப்படி போகிறது என்பதை யோசிப்பார்கள் சிலர் வீட்டில் என சமையல் செய்யலாம் என்பதை யோசிப்பார்கள் ஆனால் ஒரு சிலர் இரவில் காணும் கவனவுகளையும் பற்றி யோசிப்பார்கள்.இந்த மாதிரியான கனவுகள் நிஜமான வாழ்கையில் நடக்கும் என்பதை யோசிப்பார்கள். இன்னும் சிலர் இந்த மாதிரியான பொருள் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்பதை யோசிப்பார்கள். இனி யோசிக்க வேண்டாம் கனவில் இந்த பொருள் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி அறிய இந்த பதிவு. இதனை படித்து தெரிந்துகொள்வோம்.
மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை பலத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் மாற்றமும் நல்ல உயர்வும் கிடைக்கபோகிறது என்று அர்த்தமாம்.
பச்சை நிறத்தில் எலுமிச்சை பலத்தை கனவில் கண்டால் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று அர்த்தமாம்.
மரத்தில் நிறைய எலுமிச்சை காய்களோ, பழமோ காய்த்து இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிற்களோ அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு அல்லது அயல் நாட்டுக்கோ செல்வீர்கள்.
கர்ப்பிணி பெண்கள் எலுமிச்சை பழத்தை கனவில் பார்த்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
எலுமிச்சை பழத்தை கனவில் கருகியது போல அல்லது அழுகியது போல கனவு வந்தால் கெட்ட செயல்கள் நடக்கும் என்பார்கள்.
எலுமிச்சை பழத்தை வேறு ஒருவரிடம் இருந்து நாம் வாங்குவது போல கனவு கண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் என்பதை குறிக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>