POMIS Scheme Details in Tamil
பொதுவாக அஞ்சல் அலுவலகத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றான POMIS சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் மாதத்திற்கு 5550 ரூபாய் முதல் 9250 ரூபாய் வரை பெற முடியுமாம். இந்த பயனை நீங்கள் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தால் POMIS எனப்படும் தபால் நிலையம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டம் ஒரு ஐந்தாண்டு சேமிப்பு திட்டம் ஆகும். மேலும் இது இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் 3,62,525 ரூபாய் தரும் சேமிப்பு திட்டம்..!
குறிப்பாக இந்த கணக்கை தனிநபராக அல்லது கூட்டு கணக்காக ஓபன் செய்யலாம். கூட்டு கணக்காக அக்கௌன்ட் தொடக்க வேண்டும் என்றால் அதிகபட்சம் மூன்று நபர்கள் வரை கணக்கை திறக்கலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஆகும். சிங்கள் அக்கௌன்ட் என்றால் அதிகபட்சம் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதுவே, ஜாயிண்ட் அக்கௌன்ட் என்றால் அதிகபட்சம் 15 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
இத்திட்டத்தில் நீங்கள் ஒருமுறை டெபாசிட் செய்தால் போதும். நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கும் மாதம் மாதம் வட்டி என்பது கணக்கிடப்பட்டு இறுதியில் வழங்கப்படும். ஜாயிண்ட் அக்கௌன்ட் என்றால் ஒருவர் ஐந்து வருடத்திற்கு அதிகபட்சம் 15 லட்சம் சேமித்தால் அவர்களுக்கு ஆண்டிற்கு 7.4% வட்டி விகிதம் வளப்படுகிறது . அதாவது ஆண்டிற்கு ரூபாய் 1.11 லட்சம் வட்டி கிடைக்கும். இதனை 12 மாதங்களுக்கு பிரித்து பார்த்தால் 9250 ரூபாய் கிடைக்கும்.
இந்த தொகையை அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை மாதம் மாதம் பிரித்துக்கொள்ள முடியுமாம்.
சிங்கிள் அக்கௌன்ட்:
தனிநபராக ஒருவர் 9 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் ஆண்டிற்கு 66600 ரூபாய் வட்டியாக கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் 5550 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒவ்வொரு மாதமும் Rs. 5000/- பெறலாம்.. மேலும் மகன் அல்லது மகளுக்கு Rs.8,50,000/- மொத்தமாக கிடைக்கும் அரசு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |