வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: October 16, 2025 4:07 PM
Follow Us:
koolanalum kulithu kudi in tamil
---Advertisement---
Advertisement

Koolanalum Kulithu Kudi Kandhai Aanalum Kasaki Kattu Vilakkam | கந்தையானாலும் கசக்கிக் கட்டு பொருள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கூழானாலும் குளித்து குடி  கந்தையானாலும் கசக்கிக் கட்டு பொருள்(Kandhai Aanalum Kasaki Kattu Meaning) என்பதன் விளக்கம் பற்றி கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே இந்த பழமொழி பற்றி அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் இந்த பழமொழிக்கான அர்த்தம் என்ன என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையம்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு வகையான அர்த்தம் நிறைந்து இருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் பற்றி நமக்கு இதுநாள் வரையிலும் தெரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் நாம் பேச்சு வழக்கில் சொல்லும் பழமொழிக்கும் கூட தனி அர்த்தம் இருக்கிறது. நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் ஒரு வகையான விளக்கத்தினை மையப்படுத்தி தான் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நமது பதிவில் கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான விளக்கம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு பழமொழிக்கான விளக்கம்:

நாம் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக சுத்தமாக இருப்பதும் முக்கியமான ஒன்று. ஆனால் அத்தகைய ஆரோக்கியத்தை சரியான முறையில் வைத்திருப்பது நம்முடைய நடைமுறை மற்றும் செயலிகளில் தான் இருக்கிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் இதனை மையமாக கொண்டு நம் முன்னோர்கள் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்ற பழமொழியினை அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள்.

ஆனால் நாம் ஏதோ ஒரு பழமொழியினை கூறுகிறார்கள் என்று தான் நினைப்போமே தவிர அதற்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பது இல்லை. ஆகாயல் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான விளக்கம் என்னவென்றால்..?

“நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அத்தகைய உணவு இல்லை என்றால் நாம் உயிருடனும் வாழ முடியாது மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியாது.

எவ்வளவு எளிமையான உணவு சாப்பிட்டாலும் குளித்துவிட்டு சுத்தமான மனதுடன் சாப்பிடும்போது உடல் மற்றும் மனதை  புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கிழிந்த துணி அல்லது அழுக்கு துணியாக இருந்தாலும் அதை சுத்தம் செய்து ஒழுங்காக அணிந்துகொள்ள வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்த பழமொழி உடை மற்றும் உணவு ஆகிய அனைத்தையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும், நம் கலாச்சார மரபையும் வலியுறுத்துகிறது.

 அப்படி நாம் சாப்பிடுவதற்கு தேவையான உணவு கிடைத்து விட்டால் உடனே அதனை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் தினமும் உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நமது உடல் மற்றும் உடையினை சுத்தமாக வைத்து கொள்வதும் சிறந்தது. அதனால் சாப்பிடுவதற்கு வெறும் கூழ் மட்டும் கிடைத்தாலும் கூட அதனை குளித்த பிறகு தான் குடிக்க வேண்டும் என்றும் நமக்கு உடுத்தி கொள்வதற்கு பெரிய பட்டால் ஆனா துணி கிடைத்தாலும் கூட அதனை சுத்தமாக துவைத்து தான் உடுத்த வேண்டும் என்ற விளக்கத்தினை நம் முன்னோர்கள் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்று பழமொழியின் மூலமாக கூறியிருக்கிறார்கள்.  
கழுதை கெட்ட குட்டி சுவர் என்று திட்டுவதற்கான அர்த்தம் என்ன.?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now