வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருவேப்பிலை செடி மரமாக மாற இதை மட்டும் செய்யுங்க போதும்..

Updated On: February 7, 2025 7:25 PM
Follow Us:
How To Grow Curry Leaves Faster at Home in Tamil
---Advertisement---
Advertisement

Karuveppilai Maram Valarpathu Eppadi

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் (Karuveppilai Maram Valarpathu Eppadi) என்பதை கொடுத்துள்ளோம். நம் அனைவரது வீட்டிலும் கருவேப்பிலை செடி வைத்திருப்போம். ஆனால், பெரும்பாலான செடிகள் செடியாகவே இருக்கும். ஆனால், ஒரு சில வீடுகளில் கருவேப்பிலை செடி மரமாக இருக்கும். ஆகவே, வளராமல் செடியாக இருக்கும் கருவேப்பிலை செடியை எப்படி மரமாக வளர வைப்பது பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கறிவேப்பிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அணைத்து சமையலிலும் கருவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. இதனால், அனைவரது வீட்டிலும் கருவேப்பிலை செடி வைத்திருப்போம். ஆனால் கருவேப்பிலை செடி மட்டும் விரைவில் வளரவே வளராது.. செடி வைத்து கொஞ்ச நாள் வரைக்கும் வளர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிறகு அதன் வளர்ச்சியே இருக்காது. இந்நேரத்தில் தான் நாம் கருவேப்பிலை செடி விரைவில் வளர்வதற்கு சிலவற்றை செய்ய வேண்டும். எனவே, கருவேப்பிலை செடி வேகமாக வளர்ந்து மரமாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க..

How To Grow Curry Leaves Faster at Home in Tamil:

 how to grow kariveppila in tamil

கருவேப்பிலை செடியானது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். எனவே இது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வளராது. எனவே, முதலில்  கருவேப்பிலை செடி வெயில் காலத்தில் தான் நன்றாக வளரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை செடி வளர்ச்சி இல்லாமல் இருக்கும் நேரத்தில், அதன் வளர்ச்சியை அதிகரிக்க தேவையான அளவு கரிம உரம் அல்லது உரம் சேர்க்க வேண்டும். பிறகு இதற்கு போதுமான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு சூரிய ஒளி படும் இடங்களில் வைக்க வேண்டும்.

கருவேப்பிலை செடி வைத்து 10 மாதங்களுக்கு பிறகே அதன் இலைகளை பறிக்க வேண்டும். அதற்கு முன்பாக பறித்தால் அதன் வளர்ச்சி குறைந்து விடும்.

7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…

கருவேப்பிலை செடி  வளர முக்கியமானது சூரிய ஒளிதான். எனவே செடியை உங்கள் வீட்டு பால்கனி அல்லது நன்கு சூரிய ஒளி படும் இடங்களில் வைக்க வேண்டும்.

மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் செடியில் அதிக தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வடிகட்டி விட வேண்டும்.

மழைக்காலம் முடிந்த பிறகு, அதன் மண்ணை நன்கு உலரவிட்டு அதன் பிறகுதான் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கறிவேப்பிலை செடி வைக்கும்போது அதற்கு கரிம உரங்களை இட வேண்டும். அதன் பிறகு, வளர்ச்சியின் போது நைட்ரஜன் நிறைந்த உரங்களை இட வேண்டும். மேலும், மாட்டு எருது, ஆடு எருது, மட்கிய வேப்பம் தழைகள் போன்றவற்றை உரமாக  இட வேண்டும்.

மேற்கூறிய இம்முறைகளை பின்பற்றுவதன் மூலம் கருவேப்பிலை செடியை விரைவில் வளர வைக்கலாம்.

புதினா செடி 5 நாட்களில் துளிர் விடும், 20 நாட்களில் புதினா இலைகள் வந்து விடும்..

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now