ஏலக்காய் பரிகாரம்
வீட்டில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் வாங்குகின்ற சம்பளம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் செலவு ஆகிறது. இதனை நினைத்து இருவரும் இப்படியே சம்பாதிக்கின்ற பணமானது கரைந்து கொண்டே போனால் நம் எதிர்காலம் என்னாகும் என்று புலம்புவார்கள். மேலும் ஏதவாது கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யலாமா.! இல்லை ஜோதிடரை பார்த்து பரிகாரம் செய்யலாமா.! என்று யோசித்து பணத்தை வீணாக செலவு செய்வார்கள். இது போல் பணத்தை வீணாக்காமல் வீட்டிலேயே இருக்கும் ஏலக்காயை பயன்படுத்தி பணவரவை எப்படி அதிகரிக்கலாம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பணக்கஷ்டம் நீங்க ஏலக்காய் பரிகாரம்:
பணக்கஷ்டம் என்பது எல்லாரும் வாழ்க்கையிலும் நிகழ கூடியது தான். அதற்காக வாழ்க்கையே பணக்கஷ்டமாக இருந்தால் போராட்டமாக தான் இருக்கும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையானது மற்றவர்கள் மதிக்கின்ற வகையில் வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். அதனால் இந்த பதிவில் ஏலக்காய் பரிகாரம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறது. ஏலக்காய் ஒரு வீட்டில் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் பணக்கஷ்டமே வராது. ஏலக்காய் தெய்வீக சக்தி உடைய பொருளாக கருதப்படுகிறது.
ஏலக்காயை 108 எடுத்து அதனை மாலையாக கோற்க வேண்டும். இந்த மாலை கோர்க்கும் நூலில் மஞ்சளை தடவி கொள்ளவும். இதில் ஏலக்காயை மாலையாக கட்டி கொள்ளவும்.
இந்த மாலையை நரசிம்ம கடவுளுக்கு அணிவிக்க வேண்டும். நீங்கள் கோவிலில் உள்ள நரசிம்ம கடவுளுக்கு மாலையாக அணிவித்தாலும் சரி, அல்லது வீட்டில் நரசிம்மரின் போட்டோ இருந்தாலும் அணிவித்து வழிபடலாம்.
புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு பலன்களை அள்ளி தர போகிறது..
நீங்கள் ஏலக்காய் மாலை பரிகாரம் செய்வதனால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும், புகழ், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேலும் இந்த பரிகாரம் செய்வதோடு இல்லாமல் அதற்கான முயற்சிகளும் செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |