வீட்டில் பணவரவு அதிகரிக்க
இந்த பூமியில் பிறந்தவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது பணப்பிரச்னை தான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட தங்க மாட்டிகிறதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் வாங்கிய சம்பளம் சரியாக செலவாகிவிடும். இதனால் பலரும் மன வேதனை அடைவார்கள். அதனால் இந்த பதிவில் வீட்டில் பணவரவு அதிகரிக்க சில பரிகாரங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
வீட்டில் பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
முதலில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து கழுவி விட்டு மகாலட்சுமியை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பூஜையானது எப்படி செய்ய வேண்டுமென்றால் மாலை நேரத்தில் விளக்கேற்றி, கடவுளுக்கு பூ அணிவித்து, ஊதுபத்தி ஏற்றி, தீபாராதனை ஏற்றி வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும்போதே ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி வாசனை இருக்க வேண்டும்.
சர்க்கரை டப்பாவில் இந்த இரண்டு பொருட்களை வைய்யுங்கள்..! வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.!
கல் உப்பு பரிகாரம்:
மேலும் நீங்கள் கல் உப்பு வாங்குவதாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டும். ஏனென்றால் வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்கினால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். அது போல் கல் உப்பு வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கற்றாழை பரிகாரம்:
வீட்டின் பின்புறம் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். கற்றாழைக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது. மேலும் நீங்கள் பணம் வைக்கும் இடமானது சுத்தமாக இருக்க வேண்டும். பணத்தை தவிர வேறு எந்த மாதிரியான சீட்டு அல்லது தூசி போன்ற எதும் இருக்க கூடாது. சுத்தமாக இருக்கும் இடத்தில் தான் மகாலட்சுமி வசம் தருவாள். அப்போது தான் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் சிறிதளவு இலவங்கப்பட்டையை வைக்க வேண்டும். ஏனென்றால் இலவங்கப்பட்டைக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உடையது.
உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |