Kolaru Pathigam Benefits in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் நாம் தினந்தோறும் உச்சரிக்கும் கோளறு பதிகம் பாடல் வரிகளின் நன்மைகள் மற்றும் பாடலின் விளக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கோளறு பதிகம் பாடல் வரிகளை உச்சரிப்பது மிகவும் நல்லது என்று நம்மில் பலபேருக்கு தெரியும். ஆனால், அதனின் பயன்களும் பாடலின் விளக்கம் பற்றியும் நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, கோளறு பதிகத்தை தினந்தோறும் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும், பாடல் விளக்கம் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க.
திருஞானசம்மந்தர் அருளிய கோளறு பதிகம் மொத்தம் 11 பதிகங்களை உள்ளடக்கியது. கோளறு பதிகம் தினமும் பாடுவதால் தீராத வினையும் தீரும். எனவே, கோளறு பதிகத்தின் விளக்கம் மற்றும் பாடலின் பொருள் பற்றி பார்க்கலாம்.
கோளறு பதிகம் பாடலை பாடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- கோளறு பதிகம் பாடுபவர்களுக்கு நவகிரகங்களோ அல்லது பிற கிரகங்களோ தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையூறு ஏற்படாது.
- கோளறு பதிகம் தினமும் படிப்பதால் முன்வினைப் பயனால் வரும் துன்பங்களின் வீர்யம் குறையும். மேலும், ஏழரைசனி ,ராகு, கேது, அஷ்டமச் சனி இவைகளின் துன்பங்களை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனோபலம் பெருகும்.
- ஒருவருக்கு கிரக தோஷம், கிரக நிலை சரியில்லதாக போது தினந்தோறும் இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே இப்பாடலின் மிகப்பெரிய அற்புதம் ஆகும்.
- கோளறு பதிகம் பாடினாலோ அல்லது பிறர் கூற கேட்டாலோ நமக்கு இருக்கும் தீராத கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
- எவர் ஒருவர் தினந்தோறும் கோளறு பதிகம் பாடலை பாடி வருகிறரோ அவருக்கு ஆயுள் பலம் பெறும். மேலும், வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
- திருஞானசம்பந்தர் அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகம் குறையும்.
- முக்கியமாக, புரட்டாசி மாத பிரதோஷ நாட்களில் இந்த சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை உச்சரிப்பதன மூலம் இன்னும் அதிகமான நற்பலன்களை பெறமுடியும்.
கோளறு பதிகம் விளக்கம்:
முதல் பாடல்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
இரண்டாம் பாடல்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
மூன்றாம் பாடல்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
நான்காம் பாடல்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
ஐந்தாம் பாடல்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
ஆறாம் பாடல்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
ஏழாம் பாடல்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
எட்டாம் பாடல்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
ஒன்பதாம் பாடல்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
பத்தாம் பாடல்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
பதினோராம் பாடல்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |