Vasambu Aanmeegam
அனைவருடைய வீட்டிலும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக எவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும் கூட பணம் வந்த இடம் தெரியாமல் செலவாகி விடுகிறது என்பது தான் பெரிய புலம்பலாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் வீட்டில் சேரவில்லை என்றால் அனைவருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். இத்தகைய கஷ்டத்தினை போக்க ஏதாவது ஆன்மீகம் ரீதியாக பரிகாரம் செய்தால் என்ன என்று தான் முதலில் யோசிப்பீர்கள். ஆனால் அதற்கு என்ன பரிகாரம் செய்வது என்ற குழப்பம் இருக்கும். உங்களின் குழப்பத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று ஆன்மீக ரீதியாக வீட்டில் பண வரவு அதிகரிக்க வசம்பு பரிகாரம் எப்படி செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே பரிகாரத்தை எப்படி செய்வது, எந்த கிழமையில் செய்வது என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வசம்பு பரிகாரம்:
நம்முடைய வீட்டில் இருக்கும் வசம்பிற்கு ஆன்மீகத்தில் பணத்தினை ஈர்க்கும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் வீட்டில் வசம்பு பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் செல்வத்தினை பெருக செய்து கஷ்டத்தினையும் போக்கி விடும்.
- கல் உப்பு- சிறிதளவு
- ரூபாய் நோட்டு- 1
- வசம்பு- 1
- கண்ணாடி பவுல் அல்லது கண்ணாடி பாட்டில்
- மஞ்சள் நூல்
வசம்பு பரிகாரத்தை செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்துவைத்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த பரிகாரம் செய்ய கல் உப்பு மற்றும் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்போடு வாழ்வதற்கு ஏலக்காய் மட்டும் போதும்.. |
வசம்பு பரிகாரம் எப்படி செய்வது:
முதலில் ஒரு வசம்பினை கையில் எடுத்துக்கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி வீட்டில் உள்ள பண கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.
அடுத்து கையில் வைத்து வழிபட்ட வசம்பினை எடுத்துவைத்துள்ள ரூபாய் நோட்டில் வைத்து சுருட்டி நூல் வைத்து நன்றாக கட்டி கொள்ளுங்கள்.
அதன் பிறகு கண்ணாடி பாட்டிலின் உள்ளே கல் உப்பினை கொட்டி அதன் மேலே கட்டி வைத்துள்ள வசம்பு மற்றும் ரூபாய் நோட்டினை வைத்து விடுங்கள்.
இப்போது மீண்டும் கொஞ்சம் கல் உப்பினை ரூபாய் நோட்டின் மேலே கொட்டி பின்பு பாட்டிலை மூடி உங்களுடைய வீட்டில் பணம் எடுக்கும் இடத்தில் யாரும் கண்களிலும் படாதவாறு வைத்து விடுங்கள்.
வாரம் ஒரு முறை கல் உப்பினை மற்ற வேண்டும். மேலும் வசம்புடன் கல் உப்பினை சேர்த்து வைப்பதன் மூலம் மஹாலக்ஷ்மியின் முழு அம்சமும் கிடைத்து வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பண வரவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் வீட்டில் பணம் சேருவதற்கான முயற்சியினையும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்.. தீராத கடனும் தீர்ந்து விடும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |