பண மழை கொட்டும்
நம் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருப்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். ஆனால் சம்பளம் வாங்கி வந்தவுடன் பணம் எந்த பக்கம் போகிறதே என்றே தெரியவில்லை. வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். இப்படி உழைத்தும் கூட வீட்டில் பணம் தாங்காமல் இருந்தால் ரொம்பவே கஷ்டப்படுவோம். இதற்கு என்ன தான் காரணம் என்று யோசித்து கொண்டே இருப்போம். கோவில் மற்றும் ஜோதிடரை நாடி செல்வோம். அப்படி நீங்கள் காசு கொடுத்து பரிகாரத்தை செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று வருந்துவர்களுக்கு இந்த பதவி பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த அப்பதிவில் வீட்டில் ஊழல் பொருட்களை பயன்படுத்தி பணவரவை எப்படி அதிகரிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
பணவரவு அதிகப்படுத்த பரிகாரம் செய்வதற்கு கண்ணாடி பாத்திரம் அல்லது வெள்ளி பாத்திரம் எடுத்து கொள்ளவும். பிறகு நீங்கள் எடுத்து வைத்த பாத்திரத்தில் அரிசி, சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களை சேர்த்து கிண்ணம் நிரம்பும் அளவிற்கு நிரப்பி கொள்ளவும். இதன் மேல் பகுதியில் ஒரு குண்டூசியை எடுத்து குத்தி வைக்கவும். இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். கிண்ணத்தை கையில் வைத்து கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கஷ்டங்கள் அனைத்தும் தீர… இரவு தூங்கும்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
பூஜை செய்த பாத்திரத்தை வடகிழக்கு மூளை அல்லது தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த மூலையில் வைப்பதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்க கூடும்.
பரிகாரம் செய்யும் நாள்:
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாள் செய்தாலும் சரி அல்லது தினமும் செய்தாலும் வீட்டில் பணவரவு அதிகரிப்பதை நீங்களே காண்பீர்கள்.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்.. தீராத கடனும் தீர்ந்து விடும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |