வாஸ்து தெற்கு பார்த்த வீடு செல்வ செழிப்பை தரும்
வீடு கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. கனவு வீட்டை வாஸ்து சாஸ்திரம் படி தான் கட்டுவார்கள். வீட்டில் கட்டும் ஒவ்வொரு அறையும் பார்த்து பார்த்து தான் கட்டுவோம். அப்படி சில நபர்கள் தெற்கு பார்த்த வீடு கட்ட கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உணமையில்லை என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த பதிவில் தெற்கு பார்த்த வீட்டில் செல்வ செழிக்க ஒரு சில குறிப்புகளையும், பரிகாரத்தையும் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தெற்கு பார்த்த வீடு குறிப்புகள்:
உங்களது வீடு தெற்கு பார்த்த வீடாக இருந்தால் அதனுடைய சுவர் உயரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த திசையில் ஜன்னல் மற்றும் அலமாரிகள் ஏதும் இருக்க கூடாது.
வாசலில் அனுமன் படம் இருப்பது நல்லது. அதே போல் தெற்கு திசை பார்த்து வீடு இருந்தால் போரிங், செப்டிங் டேங்க், குழி போன்ற ஏதும் இருக்க கூடாது.
துளசி செடியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வைத்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் வருமாம்..
நீங்கள் பயன்படுத்தும் வீட்டின் கலரானது நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது. சிவப்பு நிறத்தில் தான் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
செல்வம் சேர உப்பு பரிகாரம்:
செல்வம் சேருவதற்கு காலையில் எழுந்து கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பானை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து அதில் கல் உப்பை நிரப்பி கொள்ளவும். இதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கவும். மறுநாள் காலையில் பாத்திரத்தில் வைத்த உப்பை மட்டும் நீரில் கரைத்து விட வேண்டும். இது போல மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த நீரில் எப்படி உப்பு கரைகிறதோ அது போல நமது கஷ்டமும் நீங்கி செல்வ செழிப்பு உயரும்.
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லமால் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
பணக்கஷ்டம் வராது துளசி வேரை இப்படி பண்ணுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |