Apparin Veru Peyargal in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே படித்திருப்போம். அப்படி நாம் சிறு வயதில் படித்தவை இப்போது நமக்கு நியாபகம் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது.
உதாரணத்திற்கு நம் வீட்டில் இருக்கும் குழந்தை நம்மிடம் அதனுடைய தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து ஏதாவது கேள்வி கேட்டால் நமக்கு தெரியாது. அந்த நேரத்தில் நமக்கு உதவியாக இருப்பது நம்முடைய ஸ்மார்ட் போன் தான். நாமும் நமக்கு தேவையான தகவல்களை ஸ்மார்ட் போனில் இருந்து தெரிந்து கொண்டு வருகின்றோம். சரி அப்பரின் வேறு பெயர்கள் பற்றி நாம் சிறு வயதில் படித்திருப்போம். ஆனால் ஒரு சிலருக்கு அதற்கான அர்த்தம் தெரியாது. அதனால் இந்த பதிவின் வாயிலாக அப்பரின் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
63 நாயன்மார்கள் பெயர் பட்டியல்
அப்பர் என்பவர் யார்..?
பொதுவாக நாம் அப்பர் என்று யாரை அழைக்கிறோம் என்று நமக்கு தெரியும். அதாவது நாம் திருநாவுக்கரசரை தான் அப்பர் என்று அழைக்கின்றோம்.
திருநாவுக்கரசு என்பவர் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர் ஆவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
மேலும் திருநாவுக்கரசர் தான் நம் தமிழகத்தில் முதன் முதலாக சிவன் கோவில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர்.
இவர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் புகழனார்பிள்ளை மற்றும் மாதினிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இப்படி பல புகழ்பெற்ற திருநாவுக்கரசருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அந்த பெயர்களை இப்போது காணலாம்.
அப்பரின் வேறு பெயர்கள் என்ன..?
- மருணீக்கியார்
- தருமசேனர்
- நாவுக்கரசர்
- அப்பர்
- உழவாரத் தொண்டர்
- தாண்டகவேந்தர்
பெயருக்கான காரணம்:
- மருணீக்கியார் – என்பது இயற்பெயர் ஆகும்.
- தருமசேனர் – என்பது சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயராகும்.
- நாவுக்கரசர், திருநாவுக்கரசர் – தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயராகும்.
- அப்பர் – என்ற பெயரானது திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர் ஆகும்.
- உழவாரத் தொண்டர் – சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர் ஆகும்.
- தாண்டகவேந்தர் – தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர் ஆகும்.
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |