தக்காளி செடியில் அதிக காய்கள் காய்க்க
பெரும்பாலான வீடுகளில் பூச்செடிகள் தான் அதிகம் இருக்கும். ஏனென்றால் பூச்செடிகள் இருந்தாலே வீட் அழகாக இருக்கும். இன்னும் சில பேர் வீட்டில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் இது போன்ற காய்கறிகளை அதிகமாக வளர்ப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் அழுகி போன தக்காளி இருந்தால் அதனை போட்டாலே செடியாக முளைத்து வரும். அதனை நாம் சரியாக பராமரித்தால் காய்கள் அதிகமாக காய்க்கும். அதனால் இந்த பதிவில் தக்காளி செடியில் அதிக காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தக்காளி செடி வளர்ப்பு:
முதலில் தக்காளி செடிகளை வெயில் நன்றாக உள்ள இடத்தில் தான் வளர்க்க வேண்டும். அது போல் தண்ணீர் தாரளமாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் இந்த செடியானது படர்ந்து வர கூடிய தாவரமாக இருக்கிறது. அதனால் இவை மண்ணில் புதையாமல் பார்த்து கொள்ள வேண்டும். மண்ணில் புதைந்தால் சீக்கிரம் அழுகி விடும். அதனால் நிமிர்த்தி கயிறை போட்டு கட்ட வேண்டும்.
உரம்:
தக்காளி செடிக்கு உரமாக சாம்பலை கொடுக்கலாம். ஒரு பக்கெட் தண்ணீரில் சாம்பலை கலந்து கொள்ளவும். இதனை செடிக்கு கொடுத்து வர வேண்டும். இதனால் செடிக்கு பொட்டாசியம் சத்து கிடைத்து நன்றாக வளரும.
அடுத்து வாரத்தில் ஒரு நாள் சுண்ணாம்பு கரைசலை கொடுக்க வேண்டும். இந்த கரைசல் கொடுப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் இருக்கும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு விரலி மஞ்சளை நச்சு அதில் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஆறிய பிறகு செடிக்கு ஊற்றி வந்தால் செடிகளில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.
செடிகளில் உள்ள பூக்கள் உதிராமல் இருக்க தேமோர்ம் கரைசலை கொடுக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தக்காளி செடியில் அதிக பூக்களை பூக்க வையுங்கள்.
கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |