உப்பு நீர் நோய் அறிகுறிகள் | Uppu Neer Symptoms in Tamil
உணவில் உப்பின் அளவு எவ்வளவு முக்கியமோ அதை விட நம் உடலில் உப்பின் அளவு சரியான விகிதத்தில் இருப்பது அவசியம். முன்பு உள்ள உப்பு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தது, ஆனால் இப்போது பல செயற்கை சுவையூட்டிகளால் ஒரு நாளில் பெற வேண்டிய உப்பின் அளவை, பல நாளுக்கு தேவையான உப்பை ஒரே நாளில் பெற்றுவிடுகிறார். இதனால் சிறுநீரகத்தில் உப்பு படிந்து பல விதமான நோய்கள் உண்டாவதற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் உப்பு அதிகமானால் உடலில் ஏற்படும் உப்பு நீருக்கான அறிகுறிகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வயிற்று புண்:
- Uppu Neer Symptoms: உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் வயிற்று புண் ஏற்படும்.
- மேலும் உடலில் நீர் தேக்கத்தை அதிகரித்து வயிற்றில் ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மூலம் நோய் அறிகுறிகள் |
தாகம்:
- உப்பு நீர் நோய் அறிகுறிகள்: தண்ணீர் தாகம் எடுப்பது எப்போதாவது வந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அடிக்கடி தாகம் எடுத்தால் அது உடலில் உப்பு அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும்.
- தேகத்தில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் தாக்கம் ஏற்பட்டு தாகம் அடிக்கடி எடுக்கும்.
நொறுக்கு தீனிகள் மீது அதிக ஆர்வம்:
- Uppu Neer Symptoms in Tamil: உப்பு நீர் உள்ளவர்களுக்கு பீட்ஸா, பர்கர், சாண்ட்விச், சீஸ், சிப்ஸ் ரகங்கள், கருவாடு, ஊறுகாய் போன்ற உணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
- சோடியம் அதிகம் உள்ள உணவை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் உங்களின் தேகத்தில் உப்பின் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
இரத்த அழுத்தம்:
- Uppu Noi Arikurigal: உப்பு தூக்கலாக சாப்பிடுபவர்களுக்கு தேகத்தில் நீர் தேக்கம் அதிகரிக்கும், இதனால் இரத்தத்தின் அளவு அதிகரித்து இதய சுவர் வீக்கம், சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்படும்.
- இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உருவாகும்.
கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் |
எலும்புகள் பலவீனமடைதல்:
- Uppu Neer Symptoms: உப்பு நம் உடலில் அதிகரிக்கும்போது எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவு குறைவாகும்.
- அதனால் எலும்புகள் வலுவிழந்து காணப்படும். மேலும் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் உணவில் சோடியத்தின் அளவை குறைத்து கொள்வது நல்லது.
சிறுநீரக கற்கள்:
- Uppu Neer Symptoms in Tamil: நாம் அதிகம் உப்பு சேர்த்த உணவை உட்கொள்ளும்போது இரத்தத்தில் நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கபடும். இதனால் எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து சிறுநீரக கற்கள் உருவாகலாம்.
- மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. மேலும் உப்பின் அளவை உணவில் குறைத்து சாப்பிடுங்கள்.
சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |