செல்வம் பெருக மஹாலட்சுமி அஷ்டகம் பாடல் | Namastestu Mahamaye Lyrics in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய ஆன்மீக பதிவில் வீட்டில் செல்வம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். அஷ்டகம் என்றால் எட்டு பொருள்களை கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது. தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக தீரும். சரி வாங்க நண்பர்களே மஹாலட்சுமி அஷ்டக பாடலை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் | Mahalakshmi Ashtakam Lyrics in Tamil:
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்
த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
Namastestu Mahamaye Lyrics in Tamil Meaning:
சிருஷ்டியின் மூலமாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து தேவர்களால் வணங்கப்படுபவளும், அழகிய திருக்கரத்தில் சங்கு, சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
கருட வாகனத்தில் அமர்ந்தவளும், கோலாஸூரர்களுக்கு அச்சம் தந்தவளும், சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
அனைத்தும் அறிந்தவளும், அனைத்து வரங்களைத் தருபவளும், துஷ்ட குணங்களை அழிப்பவளும், துக்கங்களை மாற்றுபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
சாதனைகள் புரிய புத்தியை அளிப்பவளும், செழிப்புடன் வாழ தனது பாத கமலங்களை அருள்பவளும், மந்திர சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
ஆதி அந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கும் காரணமாக இருப்பவளும், அதிர்ஷ்ட யோகமாகப் பிறந்தவளும், வெற்றியுடன் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
சூட்சும வடிவில் ஆதார சக்தியாக விளங்குபவளும், தீமைக்கு எதிராக அச்சமூட்டும் ருத்ரணியாக விளங்குபவளும், முப்பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், பாபங்களை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
தாமரை ஆசனத்தில் அழகுடன் அமர்ந்திருப்பவளும், ஞான தபஸ்வினியாக விளங்குபவளும், கலியுகத்தின் அன்னையாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.
மஹாலட்சுமி அஷ்டகம் பாடல் நன்மைகள்:
இந்த பாடலை கூறுபவர்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும். இந்த பாடலை ஒரு முறை கூறினால் பாவங்கள் நீங்கும்.இருமுறை கூறினால் சகல தனங்களும் கிடைக்கும்.
மூன்று முறை கூறினால் எதிரிகள் அழிவார்கள். தினமும் கூறினால் அவரின் முழு பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.
ராகுகால துர்க்கை அம்மனின் அஷ்டகம் வரிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |