வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்.!

Updated On: October 8, 2025 3:49 PM
Follow Us:
things to do on diwali at home in tamil
---Advertisement---
Advertisement

தீபாவளி அன்று செய்ய வேண்டியவை | Things to Do in Diwali in Tamil

தீபாவளி அன்று செய்ய வேண்டியவை: வணக்கம் நண்பர்களே.. வரும் திங்கட்கிழமை தீபாவளி.. இந்த சந்தோஷமான நாளில் அனைவரும் புத்தம்புதிய ஆடை அணிந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நமக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 முக்கியமானவிஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத ஒரு தவறு என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

இந்துக்கள் பண்டிகைகளில் தீபாவளி என்பது மிகவும் முக்கியமான பண்டிகள் ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. ஏனென்றால், இந்நாளில் புதிய ஆடை அணிந்து. பல வகையான பலகாரங்கள் உண்டு, வெடி, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இப்படி மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி நாளில், நாம் சில விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும். இன்னும் சில விஷயங்களை செய்ய கூடாது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

தீபாவளி அன்று செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் – Things to do on Diwali at Home in Tamil:

No: 1

தீபாவளி அன்று அதிகாலை எழுத்து சாமி கும்பிட்டு தலைக்கு நல்லெணெய் வைத்து குளிப்பது என்பது அனைவரது பழக்கம். அப்படி குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு பசும் பால் ஊற்றி அதனை நன்றாக கலந்து அதன் பிறகு அந்த நீரில் குளிக்கவும். இப்படி குளிக்கும் போதும் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் உங்களை பிடித்த தற்திரியம், பீடை இவை அனைத்தும் நீங்கும்.

No: 2 

தீபாவளி அன்று பூஜை செய்யும் போது வாசனை நிறைந்த பொருட்களை அதிகளவு பயன்படுத்தவும். மலர்களில் மல்லி, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை, ஜாதி முல்லை இது போன்று வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்துங்கள். இந்த வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்துவதினால் உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சயம் நிறைந்து இருக்கும். பூஜை செய்யும் போது அந்த பூஜையில் உங்களிடைம் உள்ள நகை, நாணயம் இது போன்றவற்றை சுத்தமாக கழுவி பூஜை வைத்து பூஜை செய்யலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவும், செல்வமும் அதிகரிக்கும்.

No: 3

தீபாவளி அன்று மிகவு கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களை மகிழ்விக்கலாம். இவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதினால் கண்டிப்பாக உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் மூலமாக உங்களுக்கு செல்வம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? அப்படி ஏற்றவில்லை என்றால் என்ன ஆகும்

No: 4

அதேபோல் தீபாவளி அன்று வாயில்லா ஜீவனான பசு மாட்டிற்கு பழங்கள், காய்கறிகள், கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி தானமாக கொடுக்கலாம். இவ்வாறு செய்வதனால் உங்களுக்கு இருந்த கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். அடுப்பில் கோவில்களில் உள்ள குளங்களில் உள்ள மீன்களுக்கு எதாவது தானியங்களை அல்லது பொரி இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கி போடலாம். இப்படி செய்வதினால் மலகட்சுமியின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் முன்ஜென்ம வினைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் அதிகரிக்க ஆர்மபிக்கும்.

No: 5

தீபாவளி அன்று மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பை வாங்கி வீட்டில் வைக்கலாம். இப்படி கல் உப்பை வீட்டில் வாங்கி வந்து வைப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சியம் நிலைத்திருக்கும். அல்லது மகாலட்சமிகு பிடித்த பொருட்களை வாங்கி வரலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

No: 6

உடைகள், உணவுகள் அல்லது பணத்தை நன்கொடையாக வழங்கி, வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்குங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள்.

No: 7

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வதன் மூலம் அஷ்ட ஐஸ்வரியமும் பெருகும் என்று கூறப்படுகிறது. மகாலெட்சுமியை ஈர்க்கும் வகையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு பாரம்பரிய சடங்காகும்.

No: 8 

தீபாவளி அன்று மகாலெட்சுமி தேவிக்கு விருப்பமான பொருள்களை வாங்கி வைத்து வழிபடுவதன் மூலம்.  வீட்டில் செல்வ செழிப்பு  அதிகரிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கூடும்.

செழிப்புக்காக லட்சுமி தேவியையும், ஞானத்திற்காக விநாயகப் பெருமானையும் வணங்குங்கள். விளக்குகள், ரங்கோலி மற்றும் பூக்களால் உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், செல்வ செழிப்பினை உண்டாக்கும் மந்திரங்களை உச்சரியுங்கள். குபேர மந்திரம் அல்லது லக்ஷ்மி காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களை தீபாவளி தினத்தன்று உச்சரியுங்கள்.

பாரம்பரிய முறையில் ஆடைகளை அணிந்து, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 5 விஷயங்கள் தீபாவளி அன்று மறந்தும் செய்யாதீர்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now