Used Cooking Oil Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே.. உலகளவில் நமது இந்தியாதான் அதிகளவு எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகின்றோமாம். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினோம் என்றால் அது பல்வகையான உடல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தற்பொழுது எச்சரிக்கின்றன. ஆக இந்த பதிவில் உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது ஏன் தெரியுமா?
பொதுவாக சமையல் எண்ணெயை வறுப்பதற்கு அல்லது பொரிப்பதற்கு பயன்படுத்தும் பொழுது அந்த எண்ணெய் அதிகளவு வெப்பம் படுத்தப்படுகிறது இதனை எண்ணெய் சிதைவுக்கு உட்படுத்தப்டுகிறது இதன் காரண்மாக எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படுகிறது.
இதனால் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் சமைப்பதற்கு உபயோகப்படுத்தினால் பல்வகையான உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் குறுகின்றன. இருந்தாலும் உணவகங்கள், வீடுகள், கல்லூரி கேண்டீன், ஃபாஸ்ட் புட், இனிப்பகங்கள் போன்ற பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சமைப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
இவ்வாறு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொழுது புற்று நோய், இதயம் பாதிப்பு, எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்பு, அல்சைமர், செரிமான கோளாறு, உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான ஏற்படுகிறது.
எனவே, இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம் உடல் நலத்தை பாதுக்காக்க ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உணவில் அதிகம் புளி சேர்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |