வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் மற்றும் விளக்கம் | Tamilukkum Amudhendru Per Lyrics in Tamil

Updated On: December 16, 2025 6:21 PM
Follow Us:
Tamilukkum Amudhendru Per Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் | Tamilukkum Amudhendru Per Song Lyrics in Tamil

நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இந்த பதிவில் கவிஞர் பாரதிதாசன் எழுதிய “தமிழுக்கு அமுதென்று பேர்” அந்த பாடலின் முழு வரிகளை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பாரதிதாசனை புரட்சிக்கவி என்றும் பாவேந்தர் என்றும் சிறப்பாக அழைத்து வந்தார்கள். இவரின் அற்புதமான படைப்புகளுக்கு சாஹித்ய அகாடமி விருது பெற்றவர். வாங்க இந்த பதிவில் தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள்

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் ஆசிரியர்:

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு -பாவேந்தர்  பாரதிதாசன் பிறந்தநாள்! | History about Puratchi Kavignar Pavendhar  Bharathidasan - Tamil Oneindia

தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்:

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழுக்கும் அமுதென்று பேர் விளக்கம்:

பாரதிதாசன் தமிழை அமுதத்தோடு ஒப்பிடுகிறார். அதாவது, அமுதம் எப்படி இனிமையாக இருக்குமோ அதைப்போலத் தமிழ் இனிமையான மொழி என்கிறார். மேலும் தமிழை மனித உயிருக்கு நிகராக ஒப்புமைப்படுத்திக் கூறுகின்றார். சமூகம் சிறப்புற்று வளர்வதற்குத் தமிழ்மொழி நீராகப் பயன்படும் என்றும் தமிழ் நறுமணம் உடையது என்றும் கூறுகின்றார்.

‘உண்டவர்களை மயக்கம் கொள்ளச் செய்யும் மதுவாகத் தமிழை உவமிக்கின்றார். மனிதர்கள் இளமையோடு பொலிவாக இருக்கப் பால் எப்படிப் பயன்படுகிறதோ, அத்தகைய பால் போன்ற சுவையும் வளமும் நிறைந்தது தமிழ். இந்தத் தமிழ் புலவர்களின் புலமையை அறிவிக்கும் கூர்வேலாகும். தமிழ் எங்கள் உயர்வுக்கு வானமாகும். இன்பத் தமிழ் மொழியே எங்கள் அறிவுக்குத் தோளாகும். இன்பத் தமிழ் எங்கள் கவிதையில் கவித்துவத்திற்கு வாளாகும். எங்கள் பிறவியின் தாயாகும். அப்படிப்பட்ட இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கையை வளமுடையதாக மாற்றக் கூடிய தீ ஆகும்’.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now