Munneer Ilakkana Kurippu
வணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே… இன்றைய பதிவில் முந்நீர் இலக்கணக் குறிப்பு பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நம்முடைய தமிழ் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்த மொழியாகும். நம் தமிழ் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் இருக்கிறது.
நம் தமிழ் மொழி உலக நாடுகளிடையே சிறந்த மொழியாக விளங்குகிறது. அந்த வகையில் தமிழ் மொழியில் இலக்கணம் ஆனது பெரும்பங்கு வகுத்துள்ளது. இதனை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. ஆனால் இதனை பெரும்பாலும் பள்ளி பருவத்தில் படித்ததோடு சரி அதன் பிறகு இதனை படித்திருக்க மாட்டோம். நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்களின் குழந்தைகளுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் மொபைலில் சர்ச் செய்து தான் அதனை சொல்லி கொடுக்கிறீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் இந்த முந்நீர் இலக்கணம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
| இலக்கணக் குறிப்பு என்றால் என்ன..? |
முந்நீர் என்றால் என்ன | முந்நீர் என்பதன் பொருள்:
மூன்று வகையான நீர் சேர்ந்து உருவானதால் முந்நீர் என்று அழைக்கப்படுகிறது. ஆற்று நீர், ஊற்று நீர் மற்றும் வேற்று நீர் என்ற மூன்று நீரும் கடலில் சேரும் இயற்கையான செயலை முந்நீர் என்று கூறுகிறோம்.
முந்நீர் என்ற சொல் புறநானூறு பாடலில் இடம்பெற்றுள்ளது. அந்த காலத்தில் கரிகாலனின் முன்னோர்களின் படகுகள் முந்நீரில் நிறுத்தப்பட்டிருந்தது என கூறப்படுகிறது.
அதனால் முந்நீர் என்பது மூன்று நீர்பரப்பை குறிக்கிறது என்று கூறலாம். அதாவது முந்நீர் என்ற சொல் கடலைக் குறிக்கிறது.
முந்நீர் என்னும் சொல்லை கொண்டு சங்கநூல் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. முந்நீர் என்பது நன்னீர் மற்றும் உப்புநீர் என்று 2 வகைப்படுகிறது.
நன்னீர் என்பதை பருக கூடிய நீர் என்றும், உப்புநீர் என்பதை பருக முடியாத கடல் நீர் என்றும் கூறலாம்.
முந்நீர் இலக்கணக் குறிப்பு:
- மக்கள் முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்று கூறுகின்றனர்.
- அந்த காலத்தில் முந்நீரில் தோன்றும் சுடரை மக்கள் வழிபட்டு வந்தனர். முந்நீரின் கடவுளாக திருமாலை வழிபட்டு வந்தனர்.
- முந்நீரில் செல்வதற்கு படகுகளும் நாவாய்க் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன.
- அரசன் குடிமக்களுக்கு நீதி வழங்கும்போது முந்நீரின் நடுவில் தோன்றும் ஞாயிறு போல் விளங்குவான் என்று இலக்கண குறிப்பு கூறுகிறது.
- பாண்டிய அரசன் நெடியான் முந்நீர் விழாக் கொண்டாடினான்.
- வைகை நீராட்டு விழா முந்நீர் விழா போல இருந்தது.
- முந்நீரில் செல்ல உதவுவது காற்று.
- திருமால் முந்நீர் வண்ணம் கொண்டவன்.
- முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும்.
- மதுரையில் முரசு முழங்கும் ஒலி முந்நீர் முழக்கம் போல இருந்தது.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














