ஜவஹர்லால் நேரு சிறு குறிப்பு | Nehru Patri Tamil
வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவு குழந்தைகளுக்கு பிடித்த மனிதரை பற்றிய பதிவு தான் இது. குழந்தைகளுக்கு பிடித்த மனிதர் என்று சொல்லும் பொழுதே தெரிந்திருக்கும். இந்த பதிவு யாரை பற்றி இருக்கும் என்று. பண்டிதர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு தான். இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவரை பற்றிய சிறு குறிப்பை இப்போது தெளிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
ஜவஹர்லால் நேரு குறிப்பு:
ஜவஹர்லால் நேரு சிறு குறிப்பு
|
| பெயர் |
ஜவகர்லால் நேரு |
| தந்தை பெயர் |
மோதிலால் நேரு |
| தாயார் பெயர் |
சுவரூப ராணி அம்மையார் |
| நேரு உடன் பிறந்தவர்கள் |
விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா |
| மனைவி பெயர் |
கமலா நேரு |
| குழந்தைகள் |
இந்திரா காந்தி |
| நேரு பிறந்த தேதி |
14.11.1889 |
| நேரு மறைந்த ஆண்டு |
27.5.1964 |
| நேரு பிறந்த இடம் |
அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா) |
| பணி |
சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர் |
| கல்வி பயின்ற கல்லூரி |
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ், அங்கு சட்ட படிப்பை முடித்தார் |
நேருவின் சிறப்பு பெயர்கள்:
- பண்டிதர் ஜவஹர்லால் நேரு
- நவீன இந்தியாவின் சிற்பி
- நேரு மாமா
- சுகந்திர போராட்ட வீரர்
- இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடி
நேரு எழுதிய புத்தகங்கள்:
- உலக சரித்திரம்
- என் இளமை நாட்கள்
- கண்டறிந்த இந்தியா
- ஜவஹர்லால் நேரு சுயசரிதை.
நேரு அறிக்கை:
- இங்கிலாந்து அயலுறவுச் செயலாளர் பிரகன் ஹெட்பிரபு அனைவரும் ஏற்கும் படியான அரசியல் அமைப்பை உருவாக்க முடியுமா? என்று நேருவிடம் சவால் விட்டார்.
- அச்சவாலை ஏற்ற இந்திய தேசிய காங்கரஸ் கட்சி 28.2.1928 கூட்டத்தை அழைத்தார்.
- எதிர்கால இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க மோதிலார் நேரு தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை நிறுவினார்.
- எட்டு பேர் கொண்ட குழு தரும் அறிக்கையே நேருவின் அறிக்கை ஆகும்.
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்.
- இவர் ஆகஸ்ட் 15, 1947 – மே 27, 1964 வரை இந்தியாவின் முதல் பாரத பிரதமராக பணியாற்றினார்.
நேருவின் பெருமைகள்:
- இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவரின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.
- சோவியத் ஒன்றியத்தால் 1989-ஆம் ஆண்டு நேருவை பெருமைப்படுத்தும் விதமாக தபால் தலை வெளியிடப்பட்டது.
- மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு நேரு துறைமுகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
- நேருவுக்கு லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
- நேரு அவர்கள் குழந்தைகள் மீதும், வருங்கால இளைஞர்கள் நலன் கருதி அவர் காட்டும் அன்பின் நினைவாக இந்தியா முழுவதும் நவம்பர் 14-ஐ “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.
நேருவின் பொன்மொழிகள்:
- உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே மேல்.
- உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்துவிடும்.
- கடப்பதற்குத் தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லையென்றால், வாழ்க்கை உப்புசப்பற்று போய்விடும்.
நேருவின் சாதனைகள்:
சுதந்திரத்தை பொறுத்தவரை நேருவின் பணிகள் என்பது எண்ணிலடங்காதவையாக இருக்கிறது. அதாவது லக்னோவில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் கூட்டத்தின் போது மகாத்மா காந்தி அவர்களை 1916-ஆம் ஆண்டில் நேரில் சந்தித்தார்.இந்தியாவில் பாராளுமன்றத்திற்கு ஜனநாயத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு பெற்ற சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் பிரதமராகவும் தேர்தலில் நின்று வெற்றியும் அடைந்தார்.கிராமப்புறங்களில் ஜனநாயகத்தை வலுப்படுத்த பஞ்சாயத்து தேர்தலை அறிமுகப்படுத்தினார்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |