Thaneervittan Kilangu Powder Making Business in Tamil
இன்றைய சூழலில் பணத்தின் தேவை என்பது அதிக அளவு உள்ளது. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு வேலை அல்லது சுயதொழில் செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு மற்றவரிடம் அடி பணிந்து வேலை செய்வதை விட மற்றவருக்கு வேலை அளிப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்படி நீங்கள் பத்து பேருக்கு முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் அருமையான மற்றும் எளிமையான முறையில் தொடங்க கூடிய ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Thaneervittan Kilangu Powder Making Business Plan in Tamil:
இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியில் பல வகையான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதனை பல வகையான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகின்றார்கள். அதனால் நீங்கள் இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் அதிக லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு, Thaneervittan Kilangu Powder Making Machine, Zip Lock Cover மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
வாங்கும் விலை 200 ரூபாய் ஆனால் விற்கும் விலை 1,600 ரூபாய் இந்த தொழிலை தொடங்கி அதிக லாபம் பாருங்கள்
தேவையான முதலீடு:
தோராயமாக 1 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கின் விலை 200 ரூபாய், Thaneervittan Kilangu Powder Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.
அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். Zip Lock Cover-ன் விலை தோராயமாக 2 ரூபாய் ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
நீங்கள் தயாரித்து வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தால் மட்டுமே போதும்.
ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கினை நன்கு சுத்தம் செய்து விட்டு. சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை Thaneervittan Kilangu Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து தந்து விடும்.
பின்னர் அதனை நன்கு சலித்து Zip Lock Cover-ல் சேர்த்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை மருந்துகள் தயாரிக்கும் இடம், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் செய்யலாம்.
சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
வருமானம்:
தோராயமாக 1 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியின் விலை 1,420 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 28,400 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |