வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அவரை செடிக்கு இந்த உரத்தினை மட்டும் கொடுங்கள்.. கொத்து கொத்தாய் காய்க்கும்..!

Updated On: February 28, 2025 3:15 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அவரை செடிக்கு இயற்கை உரம் | Avarai Plant Natural Fertilizer in Tamil

நம் அனைவருமே வீடுகளில் பல விதமான காய்கறி செடிகள் பழச்செடிகள் மற்றும் பூச்செடிகள் போன்றவற்றை வளர்த்து வருவோம். அப்படி வீட்டில் நாம் வளர்த்து வரும் செடிக்கு முறையான உரங்களை கொடுத்தால் மட்டுமே செடிகள் செழிப்புடன் வளரும். எனவே, அந்த வகையில் நம் வீடுகளில் வளர்க்கக்கூடிய காய்கறி செடிகளில் ஒன்றான அவரை செடிக்கு என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக எந்தவொரு செடியை நடுவதற்கு முன்பாக அதற்கு தகுந்த மண் கலவையை தயார் செய்ய வேண்டும். அடுத்து முதலில் அதற்கு அடியுரமாக மாட்டு எருது, மண்புழு உரம், மட்கிய இலை தளைகள் போன்றவற்றை கொடுப்பது மிகவும் அவசியம். எனவே,அவரை செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரம் கொடுப்பது மிகவும் அவசியம். எனவே, அடியுரம் கொடுத்த பிறகு, மாதம் மாதம் என்ன உரம் கொடுக்க வேண்டும் எனபதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 fertilizer for avarai plant in tamil

 அவரை செடிக்கு மண்கலவை மிகவும் அவசியம். மண் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 பங்கு உரத்தினை சேர்த்து இவற்றுடன் ஒரு பங்கு தேங்காய் நார் உரம் அல்லது மணல், கடலை புண்ணாக்கு சேர்த்து கலந்து அவரை செடியை நடவு செய்யும்போது மண்ணுடன் கலந்து விட்டு நடவு செய்தால் செடி நன்றாக செழித்து வளர தொடங்கும். இதனை செய்த பிறகு, அவரை செடியில் கொத்து கொத்தாக அவரை காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு படியுங்கள்.  

Fertilizer For Avarai Plant in Tamil:

அவரை செடி வளர்ப்பது எப்படி

தேவையான பொருட்கள்:

  • வாழை மரத்தின் பக்க கன்றுகள்
  • வெல்லம் – 5
  • புளித்த தயிர் – 1/2 லிட்டர் 
  • பெருங்காயப் பொடி – 100 கிராம்
  • முருங்கைக் கீரை – 1 கைப்பிடி

முதலில், வாழை மரத்தின் பக்க கன்றுகள் 2 அல்லது 4 எடுத்து கொள்ளுங்கள். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு வெல்லத்தை நன்கு பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வாழைமரத்தின் துண்டுகளை போட்டு ஊற வைத்து கொள்ளுங்கள்.

வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி ஈசியாக வளர்க்கலாம்..

அடுத்து, பெருங்காயத்தூள் மற்றும் முருங்கைக் கீரையை தண்ணீர் விட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை புளித்த தயிரில் கலந்து, இதனை கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலில் ஊற்றி கலந்து 1 நாள் வரை மூடி வைக்கவும்.

Fertilizer For Avarai

அடுத்த நாள் இந்த கலவையில் 200 மிலி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் அவரை செடிக்கு தெளித்து வந்தால் செடியில் உள்ள பூக்கள் உதிராமல் காய்கள் அதிகமாக காய்க்க தொடங்கும்.

இதனை நீங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் உங்கள் அவரை செடியில் அதிக காய்கள் காய்க்க தொடங்கும்.

ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now