தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்வது..! – Best Thin to Thick Hair Mask At Home in Tamil..!
முடியை வளர்க்க கஷ்டப்படுபவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அப்படி என்ன பிரச்சனை என்று நினைப்பீர்கள். ஆனால் தலை முடியை வளர்க்க அதிக கஷ்டப்படுகிறார்கள். முக்கியமாக எவ்வளவு எண்ணெய் ஷாம்பு மற்றும் சீயக்காய் சேர்த்து கொண்டாலும் முடி வளரவில்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று அனைவரும் இருக்கிறார்கள். அதற்கு தீர்வு தரும் விதமாக இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! நாம் அதற்கு முன் முடியில் செய்யக்கூடாத தவறுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!
நாம் வாரத்திற்கு 2 முறை அல்லது 3 முறை தலை குளிக்கவேண்டும். அதன் பின்பு தலையை துவட்டும் போது முடியை அடித்து அதனை துப்புறுத்த கூடாது. முக்கியமாக ஈரமாக இருக்கும் முடியை பின்ன கூடாது. அப்படி பின்னுவதால் தலை முடி வளர்வதை தடுக்கும். ஆகவே இதுபோன்ற சில தவறுகளை தவிர்க்கவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best Thin to Thick Hair Mask At Home in Tamil:
இன்று சூப்பரான Hair Pack பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் முதலில் எடுத்துக்கொள்ளும் பொருள் நெல்லிக்காய் பொடி. இந்த நெல்லிக்காய் பொடியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் தலை முடி கொட்டுவதை தவிர்க்கும். உங்கள் முடியின் நீளத்தை பொறுத்து பொடி எடுத்துக் கொள்ளவும். இப்போது 5 ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் பொடி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து நாம் எடுத்துக் கொள்ளும் பொருள் தான் செம்பருத்தி இலை. இந்த செம்பருத்தி இலை புது முடி வளர்வதற்கு தூண்டும். அதேபோல் வளரும் முடியை கருமையாக மாற்றவும் உதவி செய்கிறது. ஆகவே 2 கைப்பிடி அல்லது உங்கள் முடிக்கு தகுந்தது போல் செம்பருத்தி இலையை எடுத்துக்கொள்ளவும். அதனை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
👉 2 முறை அப்ளை செய்தால் போதும் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளர்ந்துவிடும்
அரைத்து எடுத்து வந்த செம்பருத்தி சாறை நெல்லிக்காய் பொடியுடன் கலந்து கொள்ளவும். அதன் பின்பு நல்ல பேஸ்ட் போல் மாற்றிய பிறகு அதில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்க்கவும். அதன் பின்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் மாற்றிக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
முதலில் தலையில் எண்ணெய் வைத்து சிக்கு எடுத்து கொள்ளவும். அதன் பின்பு தலையை இரண்டு பக்கமாக பிரித்து கொள்ளவும். அதன் பின் வேரிலிருந்து ஹேர் பேக் பயன்படுத்தவும். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் வேர் முதல் அடி முடி வரை அப்ளை செய்யவும். அதன் பின்பு 20 நிமிடம் அப்படியே விட்டு ஹேர் வாஷ் செய்யலாம். இதில் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசிக்கொள்ளலாம்.
பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |