சம்மரில் ஏற்படும் சரும அரிப்பு நீங்க
கோடைக்காலம் என்றாலே வீட்டிலும் இருக்க முடியாது, வெளியிலும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க சருமத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை தடுப்பதற்கு இயற்கையான முறையை பயன்படுத்துவது நல்லது. இந்த பிரச்சனை இல்லாமல் சருமத்தில் அரிப்பு பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு இந்த இயற்கையான முறையை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
துளசி இலை:
ஒரு கையளவு துளசி இலைகளை எடுத்து கொள்ள வேண்டும். இதனை நீரில் அலசி விட்டு மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை உடலில் எங்கு அரிப்பு மற்றும் எரிச்சல்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அந்த இடத்தை குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயானது சருமத்தில் உள்ள பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய் ஆனது அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதனால் அரிப்பு உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி 30 நிமிடம் வைத்திருந்து 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதனால் அரிப்பு சரியாகிவிடும். மேலும் கருமை இருந்தாலும் அவையும் நீங்கி விடும்.
தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்
ஓட்ஸ்:
ஓட்ஸ் சரும பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவற்றில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆனது சருமத்தில் உள்ள அரிப்பு பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து ஊற விடவும். 20 நிமிடம் கழித்து ஓட்ஸ் ஊற வைத்த நீரில் முகத்தை கழுவினால் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கி விடும்.
மேல் கூறியுள்ள மூன்று குறிப்புகளில் ஏதாவது ஒரு குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினாலே அரிப்பு பிரச்சனை சரியாகிவிடும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |