How to Remove Blackheads Naturally at Home in Tamil
இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவரின் முகத்திலேயும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது கரும்புள்ளிகள் தான். இவற்றால் நமது முகத்தின் அழகு மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால் அதனை போக்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் நல்ல பலனை அளிக்காமல் மாறாக தீமைகளே அளிக்கின்றன.
அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள கரும் புள்ளியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Blackheads Naturally and Permanently in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மைசூர் பருப்பு தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- தேயிலை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- பால் – 1 டேபிள் ஸ்பூன்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2 நாட்களில் மரு நீங்க வெங்காயம் மட்டும் போதும்
கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேயிலை எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு சாற்றினை கலக்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கோடைகாலத்தில் உங்க முகம் கருமையாக காட்சியளிக்கிறதா அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க
மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பாலினை கலந்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாலினை கலந்து உங்களின் முகத்தில் எங்கெல்லாம் கரும்புள்ளிகள் உள்ளதோ அங்கெல்லாம் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்து பின்னர் நன்கு குளிர்ந்த நீரால் நன்கு முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தினமும் செய்து வருவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் முகத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகள் மறைவதை காணலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |