Thick Long Hair Tips in Tamil
எப்போதும் தலை முடி கொட்டிக்கொண்டு தான் உள்ளது. என்னதான் சாப்பிடவேண்டும் என்று கேள்வியாக உள்ளது. பொதுவாக நாம் செய்யும் சின்ன விஷயத்தால் அதுவே பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதற்கு நாம் என்ன செய்வது. எப்போதும் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி தலைமுடிக்கு அப்ளை செய்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏனென்றால் அதில் நறுமணத்திற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள். அது உங்கள் முடிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரி வாங்க நண்பர்களே முடி அடர்தியாகவும் நீளமாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நாம் செய்யும் தவறு:
முதலில் கடையில் விற்கும் பொருட்களை விளம்பரங்களை பார்த்துவிட்டு வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். அப்படியே அது நல்லதா என்பதை பற்றி தெரிந்துகொள்ள பின் பக்கம் அதில் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை பதிவிட்டு இருப்பார்கள். அப்படி என்றால் அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
அதன் பின் ஷாம்பு மற்றும் சீயங்காய் போட்டு குளிக்கும் போது அதனை அப்படியே தலையில் போட்டு குளிப்பதை தவிர்க்கவும். மேலும் அதில் தண்ணீர் சேர்த்து கலந்து குளிக்கவும். சரி இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஹேர் பேக்.
செய்முறை:
நாம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் எங்கு பார்த்தாலும் இந்த புல் வளர்ந்துக்கொண்டு தான் உள்ளது. ஆகவே இது கிடைப்பது மிகவும் எளிது. அது என்ன பொருள் தெரியுமா..? அருகம்புல் இந்த புல்லில் நிறைய விதமான சத்துக்கள் உள்ளது ஆகவே அதனை நாம் எடுத்துக் கொள்வோம்.
ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!
அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அருகம்புல்லை ஊறவைக்கவும். கொஞ்ச நேரம் கழித்து அதனை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் முருங்கைக்கீரை. இதில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. அது முடிக்கு சத்துக்களை அதிகரித்து நல்ல வளர்ச்சியை கொடுக்கும். ஆகவே அதனை 2 கைப்பிடி அளவு எடுத்துக் கொள்வோம்.
அடுத்து முதல் நாள் இரவே 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுத்து மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள அருகம்புல், முருங்ககீரை, வெந்தயம் அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்..!
அடுத்து நாம் ஒரு துணியை வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அதனை தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்..!
பயன்படுத்தும் முறை:
எப்போதும் தலையில் ஹேர் பேக் போடுவதற்கு முதல் நாளே தலையில் எண்ணெய் தடவி சிக்கு இல்லாமல் முடியை வைத்துக் கொள்ளவும். இப்போது முடியை தனியாக பிரித்து முடியின் வேரிலிருந்து ஆரம்பித்து முடியின் நுனி வரை எடுத்துக் கொள்ளவும். பின் இதை முடியில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும்.
போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |