கல் உப்பு பரிகாரம்
கடன் பிரச்சனை என்பது அனைவரும் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்று.ஆனால், ஒரு சில வீடுகளில் கடன் பிரச்சனை பல வருடங்களாக தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்னும் ஒரு சில வீடுகளில் இருப்பதாய் விட கடன் அதிகரித்துக்கொண்டே போகும். எனவே, இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வீட்டில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அப்படி கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரங்களில் ஒன்றான கல் உப்பு பரிகாரம் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
கடன் பிரச்சனை தீர பரிகாரம்:
பரிகாரம் செய்யும் நேரம்:
கடன் தீர நாம் செய்யபோகின்ற பரிகாரத்திற்கு 3 அகல் விளக்கு மற்றும் கல் உப்பு தேவை. இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாக, செவ்வாய்க்கிழமை ஹோரை நேரத்தில் செய்வதன் மூலம் மிகவும் அதிகமான பலன்களை பெறலாம். அதாவது, செவ்வாய் தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆகிய நேரங்களில் பரிகாரம் செய்வது நல்லது.
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் புதிதாக மூன்று மண் அகல் விளக்கு மற்றும் கல் உப்பை வாங்கி கொள்ளுங்கள்.
அடுத்து, மூன்று அகல் விளக்கை எடுத்து ஒவ்வொன்றாக பிரித்து வைத்து கொள்ளுங்கள்.
இப்போது, கல் உப்பை ஒவ்வொரு கைப்பிடி எடுத்து மூன்று அகல் விளக்கு முழுவதும் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்.
விளக்கில் கல் உப்பை வைக்கும்போது, உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்றும் மற்றும் வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டே வைக்க வேண்டும்.
அடுத்ததாக, கல் உப்பு நிரப்பிய மூன்று அகல் விளக்கில் ஒரு அகல் விளக்கை எடுத்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அடுத்த விளக்கை எடுத்து படுக்கை அரையில் வைத்து விடுங்கள்.
மீதமுள்ள மூன்றாவது விளக்கை எடுத்து பாத்ரூமில் தண்ணீர் படாத ஜன்னல் போன்ற இடத்தில் வைத்து விடுங்கள்.
முக்கியமாக, நீங்கள் இந்த அகல் விளக்கை யாரும் இடிக்காத இடத்திலும் நடக்காத இடத்திலும் வைக்க வேண்டும். 1 மாதம் வரை வைத்துவிட்டு உப்பு நிறம் மாறும் நேரத்தில் அகல் விளக்கில் உள்ள கல் உப்பை கால் தடம் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும் அல்லது தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.
பிறகு, மாதம் ஒருமுறை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்துவருவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். எந்தவொரு பரிகாரத்தையும் தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் மட்டுமே பலன்களை பெற முடியும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |