Karthigai Deepam Festival in Tamil
தென் தமிழகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓன்று தான் இந்த கார்த்திகை தீபம் திருநாள். இந்த திரு கார்த்திகை தீபம் விழாவானது சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பண்டிகை என்று புராண நூல்கள் கூறப்படுகிறது. தமிழ் மதமான கார்த்திகை மாதம் தொடங்கும் முதல் நாளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இது முருகப்பெருமானுக்கு உரிய வழிபாடாகும். மறுநாள் ஏற்றப்படும் தீபம் சிவனுக்குரிய வழிபாடாகும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திரு கார்த்திகை என்ற விழாவாக வீட்டிலும், கோயில்களிலும் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்டுகிறது.
கார்த்திகை தீபம் கொண்டாடுவது ஏன்? – Thirukarthigai Deepam
இந்த திரு கார்த்திகை கொண்டாடப்படும் நோக்கம் என்னவென்றால் அறிவியல் ரீதியாக சில காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதாவது மின்சாரம் இல்லாத முன்னோர்கள் காலத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் வீடு வாசலில் விளக்கேற்றி வைப்பது ஒரு வழக்கமாக வைத்திருந்தனர்.
ஐப்பசி மாதம், கார்த்திகை மாதங்களில் மழை அதிகமாக பொலிந்து வீட்டு ஓரங்களில் நீர் தேங்கி நிற்கும். அந்த நீர் தேங்கி நிற்கும் சமயத்தில் நிறைய வீடு ஓரங்களில் விஷப்பூச்சிகள், பாம்புகள் போன்ற ஊர்வனங்கள் வீட்டை சுற்றி இருக்கும். நாம் இந்த கார்த்திகை தீபம் முழுவதும் ஏற்றும் தீபத்தால் விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாது, இதனால் இப்படியொரு பண்டிகையை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இது அறிவியல் ரீதியான காரணம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கார்த்திகை தீபத்திற்கு தண்ணீரில் இந்த ட்ரிக் ட்ரை செய்து விளக்கு ஏற்றுங்கள்..!
ஐப்பசி கார்த்திகை மாதத்தில் அதிக மழை காரணமாக பூமிக்கு சூரியனின் கதிர்விச்சு குறை ஏற்படும். சூரியன் கதிர்விச்சு குறைவு ஏற்ப்பட்டால் மனிதருக்கு ஆத்ம பலம் குறையும், தன்னம்பிக்கை குறையும், நோய் தொற்று அதிகமாகும்.
பொதுவாக ஜோதி வழிபாடு சூரியனை பலப்படுத்தும் ஒரு சிறந்த பரிகாரம் ஆகும். ஜோதி வழிபாடு மனிதனின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும்.
பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய் தொற்று மற்றும் சூரியனின் கதிர்விச்சு குறைவை சரிக்கட்டவே நாம் கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுகிறோம்.
பொதுவாக தீப வழிபாடு சுபம், ஆரோக்கியம், நன்மை, தனம், நல்ல புக்தி ஆகியவை சேரும். நமக்கெல்லாம் ஆத்ம ஒளியை கொடுக்கக்கூடிய சூரியனின் கதிர்விச்சு பலப்படுத்தவே இந்த கார்த்திகை தீப வழிபாடு நாம் மேற்கொள்கிறோம்.
ஆக நாம் கார்த்திகை மாதம் முழுவது விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் கார்த்திகை தீபம் திருநாளிலாவது விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றும் மகா தீபம் தான் ஞபாகத்திற்கு வரும் அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இந்த விழா உள்ளது.
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடை துணி திரியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீப திருநாளில் நீங்கள் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்து, திரியாக பஞ்சி துணியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 முதல் 12 முக தீபம் ஏற்றதினால் உண்டாகும் நன்மைகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |