பர்ஸில் பணம் பெருக
இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். நம் பர்சில் பல பொருட்கள் இருக்கலாம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
பர்சில் பணம் சேராமல் போவதற்கு காரணம்:
- மாதம் முதல் நாளில் சம்பளம் வாங்கி வந்தாலும், எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால் பர்ஸில் பணம் குறையும் நிலை ஏற்படும்.
2. பணத்தை திட்டமிடாமல் செலவு செய்வது ஆகும் .
3. வேறு விதமான செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டால் பர்ஸில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
பணம் பெருக தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க.. பணம் ஆறாக உங்கள் வீட்டில் பெருகும்..!
பர்சில் பணம் பெருக :
- நம் பர்சில் பணம் பெருக மகாலட்சுமி படம் அல்லது பெருமாள் படம் வைத்து இருப்பதன் மூலம் பணம் பெருகும்.
- புனுகு, ஜவ்வாது, அரகஜா இந்த பொருளையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பணம் பெருகும் நிலை ஏற்படும்.
பர்சில் பணம் சேர பரிகாரம் :
முதலில் புனுகு, ஜவ்வாது, அரகஜா இந்த மூன்று பொருளையும் சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். நம் மோதிரம் விரலால் மூன்று பொருளையும் தட்டில் எடுத்து வைக்கவும். அதனுடன் சிறிதளவு நெய் விட்டு, அதனை ஒரு கலவையாக கலக்கவும். பின்பு அது மை போன்று கிடைக்கும்.
பெட்டி அல்லது பர்ஸில் இருக்கும் தேவையில்லாத பேப்பர்களை அகற்ற வேண்டும். பின்பு செய்து வைத்த மையினை வெள்ளை பேப்பரில் முதல் பக்கத்தில் ஓம் என மோதிரம் விரலில் எழுத வேண்டும்.
வீட்டில் பணம் சேர இந்த 5 விஷயத்தை மட்டும் செய்யுங்கள்…!
அடுத்ததாக ஓம் என்று எழுத்து இருக்கும் பேப்பரின் பின் பக்கத்தில் ஸ்ரீ என்று எழுதவும். அந்த பேப்பரை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து விடவும். மறு நாள் பர்ஸில் உள்ல பணத்தை எடுத்து செய்து வைத்துள்ள மையினை தடவ வேண்டும். மை தடவிய பணத்தை எக்காரணத்தாலும் செலவு செய்ய கூடாது. மை தடவிய பணத்தை பர்ஸில் வைத்து இருப்பதால் பணம் பெருகும்.
இந்த பரிகாரத்தை வெள்ளி கிழமை அல்லது செவ்வாய் கிழமையில் வாசனை மலர்களை தூவிபூஜை செய்வதன் மூலம் பணம் பெருகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |